பணியில் பல விதம் உண்டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான். லஞ்சத்தை ஒழிக்க வேண்டி பணியாற்ற வேண்டியவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கொஞ்சம் நெருடல்
மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள்பாண்டி. இவர் ஒரு டாக்டரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் பெருமாள்பாண்டியை எலிக்கு மருந்து வைத்தாற்போல கச்சிதமாக பிடித்தனர். இப்போது பெருமாள் பாண்டி போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக அமர்த்தப்பட்டார். இவர் எதற்காக டாக்டரிடம் பணம் பெற்றார் எவ்வளவு கேட்டு தொந்தரவு செய்தார் என்ற முழு விவரம் இன்னும் போலீசார் வெளியிடவில்லை. இவரை திருச்சியில் இருந்து வந்த போலீசார் மதுரையில் கைது செய்துள்ளனர் என தெரிகிறது. முழு விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 மணி அளவில் நிருபர்களிடம் போலீசார் முழு விவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பில் பணியாற்ற தகுதிகள் : போலீசார் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது உண்டு ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் முதன்முறை. லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரிவில் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் போஸ்டிங் கிடைக்காது. யார் விருப்பப்படுகிறார்கள்? உண்மையில் விருப்பம் உள்ளவர்தானா, நேர்மையானர்தானா, நேர்மையாக இருந்தாலும் பார்சியாலிட்டி பார்க்காதவரா என ஒரு பிரிவிவினர் விருப்பம் தெரிவித்த போலீசாரை மறைமுகமாக கண்காணிப்பர் . பின்னர்தான் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவார். அப்படி இருந்தும் இந்த பெருமாள்பாண்டி எப்படி பசும்தோல் போர்த்திய புலியாக இருந்தார் என்பதுதான் .