Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்

அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார்.

அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது.

அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார்.

தாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள் கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த மரியாதை, பக்தி இருந்தாலும், ஒரு சமயம் தன் அருமை அன்னையின் சொல்லையும், ஏற்க மறுத்துவிட்டார். அக்பர் ஏற்காத அந்த சொல் தான் என்ன? முஜ் நகரத்தில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் இடையே ஏற்பட்ட சடையில் போர்த்துக்கீசியர், முகலாயர்களுடைய கப்பல் ஒன்றைக் கைபற்றினார்கள்.

அந்தக் கப்பலிலிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன், பயணிகள் வைத்திருந்த சமையல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, நகரத் தெருக்களில் ஓட விட்டார்கள்.

இதைக் கேள்விபட்ட அக்பரின் அன்னை, போர்த்துக்கீசியர்களுக்கு பாடம் புகட்ட இன்னொரு சமயலை அதுபோல செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஆனால், அன்னையிடத்தில் பெருமதிப்பும், பாசமும் கொண்ட அக்பர், முதன் முறையாக அவரது பேச்சுக்கு அடிபணிய மறுத்தார்.

“மதியில்லாத செயலை புரிந்த போர்த்துக்கீசியர்களை போல, நானும் செய்ய விரும்பவில்லை. அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு அழகல்ல. பெருமையும் இல்லை. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை அவமதிப்பதாகும்.” என்று பணிவுடன் பதிலளித்தார்.

அன்னையும் அக்பரின் பதிலைக் கேட்டு அமைதியானார்.

(கண்டதை படைக்காமல், கண்டெடுத்ததை படைக்கிறோம்)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: