டைடன்” நிலவின் வெளிப் புறம் ஐஸ் கட்டி யினால் ஆன தண்ணீர் மற்றும் அமோனியாவால் ஆனது. அவை மிகக்குறைந்த வெப்ப நிலையிலேயே உருகக் கூடியது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப் புறத்தில் படர்ந்து நிற்கிறது.
“டைடன்” நிலவில் உள்ள மலைகளின் இடையே தற்போது எரிமலையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனில் தெற்கு பகுதியில் உள்ளது. மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன. இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால் இந்த எரிமலையும் பனிக்கட்டி மூடிக் கிடக்கிறது. இவை காசினி செயற்கை கோளின் “3டி” காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை புவியியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேராசிரியர் டாக்டர் கிர்க் தெரிவித்தார்.
நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி