இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்கு தளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனா ளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரி க்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைர ஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறு வனம் கூறியுள்ள மை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்