Saturday, June 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரத்தால் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவர் . . .

உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள் ளன. ஆனா லும் என்றெ ன்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெரு ஞ்சுவர்.

நிலவில் இருந்து பார்த் தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமை யும் இதற்குண்டு. நாட்டின் பாது காப்புக் காக பிரம் மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத் தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.

இதன் சில பகுதிகள் மட்டு மே தற்போது சுவராக நீடிக் கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை யில் பல்வேறு மன்ன ர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலை யில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக் கப்பட்டு வந்தது.

இவ்வாறு கிழக்கே ஹெ பேய் மாகாணம் ஷாங் ஹாய் குவானில் தொ டங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிர மாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக் கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய் வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி லயோனிங் கலா சார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப் பிங் துறை அதிகாரிகள் கூறிய தாவது: மரப் பெருஞ் சுவர் பற்றி சீன வரலா றுகளில் கூறப்பட் டுள்ளன. அது உண்மை தான் என தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப் பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: