இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென,’பாரத் பென்ஸ்’என்ற புதிய பிராண்டு பெய ரை டைம்லர் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முத ல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என்று ம் தெரிவித் துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரி க்கும் டைம்லர் நிறுவனம், கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற்றுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல்,மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற்சாலையில் பஸ்,டிரக் உள்ளிட்ட கனரக வாகன ங்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.இந்திய சந்தையில், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு பெயரிலேயே கார்க ளையும், கனரக வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில்,இந்தியாவில் வளர்ந்து வரும் கனரக மார்க் கெட்டில் முக்கிய இடம் பிடிக்க நினைத்த டைம்லர்,கனரக வாகன உற்பத்திக்கென சென்னைக்கு அருகில் ஓரகடத்தில் ரூ4,400 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைத்து வருகிறது.
இந்த தொழிற்சாலை ஆண்டு்க்கு 36,000 கனரக வாகனங்கள் தயா ரிக்கும் திறன் படைத்தாக இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் முதல் கனரக வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த டைம் லர் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கு புதிய பிராண்டு பெயரையும் டைம்லர் நிறுவனம் அறிமுகப்படுத் தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் டிரக்கு களை பாரத் பென்ஸ் பிராண்டு பெயரில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்லர் தலைவர் டயட்டர் செட்சீ கூறுகையில்,”சர்வதேச அளவில் டைம்லரின் 5வது கனரக வாகனங்களுக்கான பிராண் டாக பாரத் பென்ஸ் உதயமாகியுள்ளது.இந்திய கனரக வாகன சந்தையில் முதன்மையான இடத்தை பிடிக்க விரும்பு கிறோம். இந்தியாவுக்கென நம்பகத்தன்மை வாய்ந்த வாகனங்களை தொடர் ந்து அறிமுகப்படுத்துவோம்,”என்றார்.
( இணையம் ஒன்றில் வெளிவந்த செய்தி )