ஏ
விஎம் புரொட க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்’ பட த்தின் படப்பிடிப்பு தஞ் சாவூர், கும்ப கோணம், புதுக்கோ ட்டை, மன்னார் குடி போன்ற ஊர்களில் நடந்து வருகி றது.
இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு ஆடிப்பாடும் “ஊரு ஊரு தஞ்சாவூரு இது ராஜராஜன் ஆண்ட ஊரு” என்ற பாடல் காட்சியை தஞ்சை பெரியகோயில், அரண்மனை, 
தஞ்சை முக்கிய வீதிகளிலும் பட மாக் கினார்கள்.
விதார்த்- கதா நாயகி கவிதா நா யர் சம்பந்தப்பட்ட காதல் காட்சி களும், விதார்த்- மயில்சாமி, அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விதார்த்- பொன்னம்பலம் குழுவினர் சம்பந்தப் பட்ட ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வரும் 175-வது படமான `முதல் இடம்’ படத்தில் கவிதா நாயர், இ
ளவரசு, மயில்சாமி, `பொல்லா தவன்’ கிஷோர், `களவாணி’ திருமுருகன், கலைராணி, பொன்ன ம்பலம், `வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி, மனோபாலா மற் றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இசை: டி. இமான், ஒளிப் பதிவு: பி. செல்லத்துரை, எடிட்டிங்: வி.டி. விஜயன், சண்டை: திலீப் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாடல்கள்: அறிவுமதி, கபிலன், யுகபாரதி, தயாரிப்பு நிர்வாகம்: தஞ்சை கே. மோகன், பி. சுரேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆர். குமரன். தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ். குகன்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )