வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிக ரித்து வருகிறது” என்கிறார், பல்மரு த்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி.
வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற் காசிய நாடுகளில் அதிகமாகி வரு கிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டு பிடிக்க காலதாமதமா வதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணி க்கை அதிகரித்து வரு வதாக, நிசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரி விக்கிறது.
அறிகுறிகள்
* வாயில் ஏற்படும் கொப்புள ங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட் களாவது இருக்கும்.
* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்ப டும். வெள்ளை அல்லது சிவ ப்பு நிற புள்ளிகள் வாயின் உட்பு றத்தில் காணப்படும்.
* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற் புறத்தில் சிறு புண்களும், வீக்கமான கன்னங்களும், ஈறு வீக்க ங்களும் உண் டாகும்.
* நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் வாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமா கின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்து வதற்கும் சில உணவுகள் உள்ளன.
அந்த உணவுகள்
கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.
பாலாடைக்கட்டி: இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப் படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக் கப்படுகிறது.
கேரட்: கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாத வாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத் தம் செய்யப்படுகிறது.
புதினா: புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து
சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.
எள்: இவை பற்கள், ஈறுகளைப் பாது காக்கும் எலும்புகளுக்கு தே வையான கால்சியத்தை கொடு க்கிறது. இதன் மூலம் பற்க ளுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.
பற்களில் உண்டாகும் பிரச் சினைகள்
* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போ துதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.
* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடன டியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடை யாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறு களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.
பற்களை பாதுகாக்கும் முறை
பல் துலக்குதல்: இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற் களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற் களின் இடுக் குகளில் எஞ்சியுள்ள உணவுப் பொரு ட்களைச் சுற்றி ஒரு வித அமில த்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனா மல்களை அரித்து விடு கின்றன.
கொப்பளித்தல்: சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப் பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறுசிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
நாக்கை சுத்தம் செய்தல்: பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
பரிசோதித்தல்: ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரி டம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடை க்கும்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.