தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல்
நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிக குறுகிய கால அவகாசமே உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார் த்தை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும், அ.தி.மு .க. தலைமையிலான கூட்டணியிலும் கடந்த சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த் தைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த் தைதான் பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதில் இன்று சுமூக முடிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி
யுள்ளது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 இடம், விடுதலை சிறுத் தைகளுக்கு 10 இடம், கொங்கு நாடு முன் னேற்ற கழகத்துக்கு 7 இடம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடம், மூவேந்தர் முன்னே ற்றக் கழகத்துக்கு ஒரு இடம் கொ டுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி முதலில் 90 இடங்களை எதிர்பார்த்தது. பல்வே று கட்ட ஆலோசனைக்குப் பிறகு 60 தொகுதிகளை பெற்றுக்கொ
ள்ள காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ள தாக தெரிய வந்து ள்ளது. இந்த நிலை யில் 60தொகுதிகளும் தாங்கள் விரும்பும் தொகு திகளாகவே இருக்க வேண்டும் என்று தமி ழக காங்கிரஸ் தலைவர்கள் புதிய கோரி க்கை ஒன்றை தி.மு.க.விடம் வைத்து ள்ளனர்.
தென் மாவட்டங்களில் அதிகமாகவும், தங்கள் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளும் தொகுதிகளையும் காங்கிரசார் பட்டியலாக கொடுத்துள்ளார்
களாம். இது தி.மு.க. தலைவர்களுக்கு அதி ர்ச்சியையும் அதிருப் தியையும் கொடுத்து ள்ளது. காங்கிரஸ் சுட்டிக் காட்டும் 60 தொகுதிகளை அப்படியே கொடுக்க இயலா து என்று தி.மு.க. தலைவர்கள் கூறியு ள்ளனர்.
இதனால் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர் களும் கையெழுத்திடுவது தாமதம் ஆனது.காங்கிரஸ்காரர்கள்
கேட்கும் 60 தொகுதிகளில் பெரும் பாலன வை கிராம தொகுதி களாக உள்ளன வாம். ஆனால் தி.மு.க. அந்த தொகுதிகளை கொடு க்க விரும்பவில்லை.
நகர்ப்புறங்களில் உள்ள தொகுதிகளை காங் கிரசு க்கு அதிகமாக கொடுக்க தி.மு.க. முன் வந்துள்ளதால் இன்று மதி
யம் வரை அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை என்று தெரிய வந்து ள்ளது. இன்றிரவுக்குள் 60 தொகுதிகளை அடை யாளம் காணும் விவ காரத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டு விடும் என்று இரு கட்சி களின் மூத்த தலைவர்கள் நம்பி க்கை தெரிவித்தனர்.
இன்றிரவு தீர்வு ஏற்படும் பட்சத்தில் தொ குதி பங்கீடு அறிவிப்பை இன்றிரவே தி.மு.க.-காங்கிரஸ் தலை
வர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவா ர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி யில் இருந்து ஐவர் குழு வருவதில் தாமதம் ஏற்ப ட்டால், நாளை தொ குதி பங்கீடு பற்றி உறுதியாக அறிவி க்கப்பட்டு விடும்.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால்
அவர் திடீரென தனது சொந்த மாநிலமான காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத் தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கையெழுத்திடு வார் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 14 கட்சிகள் உள்ளன. இதில் 4
கட்சிகளுடன் மட்டுமே அ.தி.மு.க. உடன் பாடு செய்துள்ளது. இன்று (வெள்ளிக் கிழமை) பிற்பகல் இடது சாரிகள், ம.தி. மு.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய உ
ள்ளது. இந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்கனவே தொகுதி பங்கீடு விபரங்களை பேசி முடித்து விட்டதால் எந்த சிக் கலும் இல்லாமல் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது பெரும்
எதிர்பார்ப்பை ஏற் படுத்தி உள்ளது. 48 இடங்களை தே.மு.தி.க. கேட்டு ள்ளதாக கூறப்படுகிறது. இதுகு றித்து அ.தி.மு.க. – தே.மு. தி.க. தலை வர்கள் பல தடவை சந்தி த்துப் பேசி சுமூகமான ஒரு முடி வை எடுத்துள்ள தாக தெரிய வந்து ள்ளது.
இன்று மாலை விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா மற்றும் கட்சி மூத்த தலைவர்களுடன் போ யஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜய காந்தும் கையெ ழுத்திடுவார்கள்.
விஜயகாந்த் போயஸ் கார்டனுக்கு செல்ல இயலாவிட்டால் பண் ருட்டி ராமச்சந்திரன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்தி டுவார் என்று மற்றொரு தகவல் பரவி உள்ளது. இன்றிரவுக் குள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் தொகு தி பங்கீட்டை அ.தி. மு.க. இறுதி செய்து அறிவித்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )