Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ண டித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக் கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத் தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.

இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களி லிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய் களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத் தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப் படுகிறது.

அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்ல மை மிக்க, புகழ்மிக்க மருந் தாக வெங் காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோ ஷத்தை ஏற்படு த்தும் நச்சு நுண்மங்க ளையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.

நோய்த்தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசய னப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்று நோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட கார ட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.
ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேக ரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன் டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர் களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான் கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேரா மல் அழிக் கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந் தலாம்.

பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடு கின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரி க்கிறது.

கோதுமை ரொட்டி :
ரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத் தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர் ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப் பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரி டாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவு கிறது. இத்துடன் கீரையையும், முட்டை யையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால்

மீன் மற்றும் நண்டு :
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த் தொற்றும் ஏற்ப டாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும். தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல் படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்து வதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்  களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்ற லுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவு கிறது. உணவின்மூலம் உள்ளே சென்று ள்ள நோய்த்தொற்று நுண்மங் கள் முட்டை க்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரி க்கிறது. முட்டைக் கோஸ ஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப் பொருட் களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: