கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற் றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவி ற்கும் காட் டுக் கறிவேப்பிலை மருந் துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறி வேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமண மும் ஒருங்கே அமைந்திருக்கும்.
காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ் பரஸ், கார்போ ஹைட் ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச் சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண் ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது.
இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது. வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம் பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் – தூய மருவேறு காந்தளங் கை மாதே உலகிற் கருவேப்பிலை யருந்திக் காண்.
என்ற பாடலால் கறிவேப்பி லையை உண்டு வர வாயில் சுவை யின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயி ற்றுளைச்சல், பித்தம், பைத் தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது. கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குண முள்ள இந்தக் கறிவேப் பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப் பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது.
பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சா கத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவ ற்றைக் கறிவேப் பிலை குணப்படுத்தும்.
பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறி வேப் பிலை உதவுகின்றது. வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற் றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப் படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவே ப்பிலை உதவுகின்றது.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களைப் பலப் படுத்துகிறது. பத்திய உணவு சாப்பி டுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.
அரோசிகம் எடுபட எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத் துப்போவதே இதற்குக் கார ணம். இதைப் போக்க கறிவேப் பிலைத் துவை யல் நன்கு பயன்படும். கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர் த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.
இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத் தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும். அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது.
உடல் உறுதி பெறும். பைத்தியம் தெளிய புத்தி சுவாதீன மில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலை யில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.
சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற் றையும் விட்டுக் கலக்கி, தின சரி காலையிலும் மாலை யி லும் சாதத்தில் போட்டுக் கலந் து சாப்பிடக் கொடுத்து விட வேண் டும்.
இந்த விதமாக புத்தி சுவா தீனம் அடையும் வரை கொடு த்து வர வேண் டும். கறிவே ப்பிலையில் நிறைய உயிர்ச் சத்தும் சுண்ணா ம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக் கும் கறிவேப் பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது.
ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண் டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப் பிலைத் துவை யலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )