சேலை கட்டுவதில்கூட கவர்ச்சி இருக்கிறது; நீச்சல் உடையில் நடிப்பதில் தவறேதும் இல்லை என்று மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கூறி யுள்ளார். நடிகை ராதாவின் மகள் கார்த் திகா கோ படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் நாயகியாக அறிமுகமாகிறார். விரை வில் இப்படம் திரைக்கு வரவி ருக்கும் நிலையில், தன் மகளை பத்திரிகை யாளர் களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ராதா. அதன் பின்னர் கார்த்திகா அளித்த பேட்டியில், `என் அம்மாவும், பெரியம்மா
அம்பிகாவும் தமிழ் பட உலகில் மிகப்பெரிய கதாநாயகிகளாக இருந்த வர்கள். இருவரும் ஜாம்பவான்கள். இரண்டு பேரும் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற இமயங் களுடன் நடித்தவர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது. `கோ படத்தை தியேட்டரில் பார்க்கும்போது என்னை ஒரு சாதாரண புதுமுகமாக நினை த்துக் கொள்ளு ங்கள். ராதா- அம்பிகாவின் மகள் என்ற நினைப் போடு படம் பார்க்க வேண்டாம். நான், கவர்ச்சிக்கு எதிரானவள் அல்ல. ஒரு நடிகைக்கு கவர்ச்சி அவசியம். கவர்ச்சி இல்லையென்றால், சினிமா வில் நீடிக்க முடியாது. புடவை கட்டுவதில் கூட கவர்ச்சி இருக்கிறது.
படத் தின் கதை க்கும், கதாபாத்திரத்துக்கும் தேவை என் றால் நீச்சல் உடையில் நடிப் பது தப்பு அல்ல. அதேநேரத்தில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதா பாத்தி ரங்களை தேர்ந்தெ டுத்து நடிக்க வேண்டும் என்ற கொள் கையில் உறுதி யாக இருக் கிறேன், என்றார்.
நடிகை ராதா கூறுகையில், `நான், நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் என் மகள் கார்த் திகாவுக்கு சில அறிவுரைகளை சொல் லியிருக்கிறேன். எல்லோ ருடனும் பணி வுடன் நடந்துகொள்ள வேண்டும். தொழிலை கடவுளாக மதிக்க வேண் டும். தொழில் சொல்லிக் கொடுத்த குருவை வணங்க வேண்டும். யாருட னும் நம்மை ஒப்பிட்டு பார்க்க க்கூடா து. படப்பிடிப்புக்கு போனால், எப்போது `ஷாட் எடுப்பார்கள் என்று யாரிடமும் விசாரிக் கக்கூடாது. மற்றவர்கள் அறிவுரை சொன்னால், கேட்டுக்கொள் ள வேண்டும். இதெல் லாம் நான், என் மகளுக்கு சொன்ன அறிவுரைகள். நான் நடிக்க வரும் போது, சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் வந்தேன். ஆனா ல் இப்போது அப்படி அல்ல. நிறைய படித்த பெண்கள் வருகி றார்கள். சினிமாவை பற்றியும், அதன் பின்புலம் பற்றியும் நன்றாக தெரிந்துகொண்டு வருகிறார்கள். சொந்தமாக படம் தயாரிக்கும் ஆசை எனக்கு இல்லை. மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை. என் குழந் தைகள் மூன்று பேரையும் கவனித்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது, என்றார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது
hai karthu,happy diwali to u & ur family