மு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்கு மேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப் படுகின் றார்.
இளமைப்பருவம்
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவா ரூருக்கு அருகிலுள்ள திருக் குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திரு மதி அஞ்சுகம் அம்மையார் அவர்க ளுக்கும் மகனாகப் பிறந் தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.
கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக் கியம் ஆகிய வற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக் கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச் சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13 ஆவது அகவையில், சமூக இயக்கங் களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டார்.
தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உத வியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக் கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற் றலையும் எழுத்தாற் றலையும் வளர்த்துக் கொள்ள அவ்வ மைப்பு உதவியது. சில கால த்துக் குப்பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாண வர் களின் கழகம்” என்ற அமைப்பாக உருபெற்றது.
அரசியல்
மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலை வர்க ளில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப் பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன் பின் இந்தி எதிர்ப்பு போரட் டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர் களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத் துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ் விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ் நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாண வர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலை களிலும் ஈடு பட்டனர்.
முரசொலி நாளிதழ்
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முர சொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலா மாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித் தோழர் களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோ ருடன் கொண்டாடினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அர சால் இந்தி திணிக்கப்படு வ தை வன்மையாக எதிர்ப்ப தென தீர்மானம் நிறை வேற் றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந் திரளான மக்களுடன் அமைதி யான முறையில் கடைபிடிப் பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு
முழக்கமிட்டார்: மொழிப் போராட் டம்”.. எங்கள் பண்பாட்டை பாதுகா க்க, இது எமது மக்களின் தன்மா னம் மற்றும் எங்கள்து கட்சியின் அரசியல் கொள்கை..“ மேலும்”இந்தி என்பது உணவு விடுதியி லிருந்து எடு த்து செல்லும் உணவு (எடுப்பு சாப் பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொ ல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத்
தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்ட மளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றும் அவர் கூறினார். அக்டோ பர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னை யில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்து கொள்ள மையை உணர் த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்து வெதென மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணா நிதியும் கைது செய்யபட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சை யாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆண்டு | தொகுதி | வாக்கு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்கு | வாக்கு வேறுபாடு |
1957 | குளித்தலை | 22785 | கே. எ. தர்மலிங்கம் | காங்கிரசு | 14489 | 8296 |
1962 | தஞ்சாவூர் | 32145 | பரிசுத்த நாடார் | காங்கிரசு | 30217 | 1928 |
1967 | சைதாப்பேட்டை | 53401 | எஸ். ஜி. வினாயகமூர்த்தி | காங்கிரசு | 32919 | 20482 |
1971 | சைதாப்பேட்டை | 63334 | என். காமலிங்கம் | காங்கிரசு | 50823 | 12511 |
1977 | அண்ணா நகர் | 43076 | ஜி. கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 16438 | 16438 |
1980 | அண்ணா நகர் | 51290 | எச். வி. ஹண்டே | அதிமுக | 50591 | 699 |
1989 | துறைமுகம் | 41632 | கே. எ. வகாப் | முஸ்லீம் லீக் | 9641 | 31991 |
1991 | துறைமுகம் | 30932 | கே. சுப்பு | காங்கிரசு | 30042 | 890 |
1996 | சேப்பாக்கம் | 46097 | S. S. நெல்லை கண்ணன் | காங்கிரசு | 10313 | 35784 |
2001 | சேப்பாக்கம் | 29836 | தாமோதரன் | காங்கிரசு | 25002 | 4834 |
2006 | சேப்பாக்கம் | 34188 | தாவுத் மியாகான் | சுயேச்சை | 25662 | 8526 |
பொருளாளர்
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன் றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறை யாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்கு பெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன், பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சி யில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க. வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இது தவி ர்த்து, தமிழகத்தின் முதல்வரா கவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
- 1969-1971 — கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல்
முறை ஆட்சி
- 1971-1974 — இரண்டாவது முறை யாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
- 1989-1991 –எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
- 1996-2001 — நான்காம் முறை ஆட்சி
- 2006-இன்றுவரை — ஐந்தாம் முறையாக ஆட்சி
விமர்சனங்கள்
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுப ட்டார்கள்.[1],[2] [3] 1976-ல் மு. கருணா நிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரண மாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளு னர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க் காரியா கமிசன் [4] [5] 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக் கடிக்கால அறிவிப்பை அப்பொ ழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அமல்படுத் தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரை க்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கி னார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறை யில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கரு ணாநிதி, பிற்காலத்தில் அதனுடன்
கூட்டணி வைத்துக்கொண் டது.
தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்டது, பொது மக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. .
2008 – 2009 இல் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படு கொலை செய்யப்பட்டனர். தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணா நிதி, ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமை யைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன் றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறிக்கொண்டார்.[1]. இதன் விளைவாக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளா னார்.
குடும்பம்
மனைவிகள்
|
மகன்கள்
|
மகள்கள்
|
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந் தவர் (2007), தற்பொழுது (2009) தமிழகத்தின் முதல் துணை முதல மைச்சராக பொறுப் பேற்று ள்ளார் .மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச் சராக பொறுப்பேற் றுள்ளார் கனிமொழி இந்திய நாடா ளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற் பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய் ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகிய வற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரண மாகக் கூறப்படுகிறது.
இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன் னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்கு மத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.
திரைப்படப் பணி
கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
- கண்ணம்மா
- மண்ணின் மைந்தன்
- பராசக்தி
- புதிய பராசக்தி
- மந்திரிகுமாரி
- பாலைவனப்பூக்கள்
- மனோகரா
- உளியின் ஓசை
- பூம்புகார்
மேலும் பல…
மேடை நாடகங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமகுடம்
- ஒரே ரத்தம்
- பழனியப்பன்
- தூக்கு மேடை
- காகிதப்பூ
- நானே அறிவாளி
- வெள்ளிக்கிழமை
- உதயசூரியன்
மேலும் பல…
புத்தகங்கள்
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தொல்காப்பிய உரை
- சங்கத் தமிழ்
- ரோமாபுரி பாண்டியன்
- தென்பாண்டி சிங்கம்
- வெள்ளிக்கிழமை
- இனியவை இருபது
- சங்க தமிழ்
- பொன்னார் சங்கர்
- திருக்குறள் உரை
மேலும் பல…
-*-
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
ivarukkeelam thani oru webpzge-a!?
Intha pathippu Kalaingarin vaazhkkai kurippu maathiri theria villai….etho avarai vanjippathu pondra blog-aagave therigirathu…..intha pathippai neengal Kalaingarin vaazhkkai varalaru endru veliyittirkkath thevaiyillai….