ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலை ந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல் லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ் காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பல ரும் புலம்பி வருகின்றனர்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவ ருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டை க்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலு ங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும் போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்… ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறி வருகி ன்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர் களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பத்திரிகையாளர்கள் முன்தோன்ற வேண் டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அல ட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர். இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ் சம் ஓவர் தான்!.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது