Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
by V2V Admin
அருமை நண்பர்களே !!!
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கி றீர்களா?, !!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை, நோய் களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேரா சை பிடித்த வியா பாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறி க்கு அப்பாவி பொதுமக் கள் பலியாகி வருவது கண்கூடா யிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவி வருகிறது.
இது அவசர யுகம், எல்லாவ ற்றிற்குமே அவசரம் தான், விதைப் பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறி யன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.
பழ வியாபாரிகளது மண்டி கள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா, பப்பாளி, கொய்யா, சீதாப்பழம், மாங் காய்களை குவியல் குவி யலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின் னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள். கால் சியம் கார்பைடில் ஆர்சனிக், பாஸ்பரஸ் இரண்டும் கலந்திரு க்கும். இது மிகவும் நச்சுத் தன்மை உடையது. இதிலிருந்து வெளி வருகிற அசெட்டிலின் வாயு காய்களின்மீது பரவி, பழுத் தது போன்ற தோற்றத்தை உண் டாக்கும். ஆனால், உண் மையில் உள்ளூக்குள் பழு த்திரு க்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போது மானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொ ண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]
செயற்கையாக பழுக்க வை த்த பழங்களை ஒருவர் பார்த் தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக் களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதார ணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற் கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோ கத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக் கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன் படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங் களையும் கொய்யா, பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வரு வது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது!!!, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழ வகையைச் சேர்ந்ததாக இருந் தாலும், அதன் மருத்துவ குணங் கள் அதிசயிக்கத் தக்கது, இதில் குளூக்கோஸ், ஃபிரக் டோஸ் மற்றும் சுக்ரோஸ் போ ன்ற சர்க்கரைகளுடன் நார்ச் சத் தும் அடங்கி உள்ளதால் அற்பு தமான உணவாகும். ஏழை களி ன் பழம் என்றும் சொல் லுவர், ஆனால் இதைக் கூட சதி கார ர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கி ன்றனர்.
இப்பழத்தை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படு கின்றன. இயற்கையான வற் றை விட “மினுமினுப்பு’ கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக் கம் இருந்தால் அது இயற் கையான பழம் என வாடிக் கையாளர்கள் நினைக்கின்ற னர். அது முழுவதும் சரியான தல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம் பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறா னதே. ஏனெனில் நோய் தாக்குதலா லோ, மாங்காய்களின் பால் படுவ தாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோ ன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற் கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.
கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவா சித்தாலே உடல் நலம் பாதிக்கும். இதனால் முதுமைத் தோற்றம், இதய நோய், புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். வெல்டிங் செய்ய உப யோகிக்கும் கால்சியம் கார்பைடு, தடை செய்யப்பட்ட ரசாயனம் . ஆனா லும் மன சா ட்சியே இல்லாத சில ரசாயன வியாபாரிகள் கள்ளச் சந்தை யில் இது போன்ற பழ வியாபாரி களுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர். இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமை யான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனேசுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்