2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப் பட்டுள்ளது.
2ஜி முறைகேட்டில் முன்னாள் தொ லைத்தொடர்புதுறை அமைச்சர் ரா சாவுக்கு இணையான பங்கு கனி மொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண் டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த் தது.
இதைத் தொடர்ந்து இருவருக் கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் மனு தாக் கல் செய்தனர்.
நேற்றும் இன்றும் இந்த வழ க்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி, 2ஜி ஸ்பெக் ட்ரம் ஒதுக் கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வாதா டினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் ஆஜராகி வாதாடி னார்.
இன்றும் விசாரணை தொ டர்ந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு. யு.லலித், கலைஞர் டிவி யி்ன் மூளையாக கனி மொழி செயல் பட்டார் என் றும், 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு கைமாறிய ரூ.214 கோடி உள்பட அனைத்து பண விவகாரங்களும் அவருக்குத் தெரி யும் என்றும் கூறினார்.
2ஜி விவகாரத்தில் ஆ.ராசாவு க்கு இணையான பங்கு கனிமொ ழிக்கும் உள்ளதென்று அவர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட் ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதி பதி ஓபி ஷைனி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் மே 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் கனிமொழி இப்போதைக்கு கைதாக மாட்டார் என் பது உறுதியாகியுள்ளது. அவரு க்கு இது தற்காலிக நிம்ம தியைத் தந்து ள்ளது.
அதே நேரத்தில் 14ம் தேதி வரை கனிமொழியும் சரத்குமாரும் தின மும் நீதிமன்றத்தில் ஆஜராக வே ண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு ள்ளது.
வரும் மே 13ம் தேதி தமிழக சட் டசபைத் தேர்தல் முடிவுகள் வெ ளியாக உள்ளன. அடுத்த நாள் கனிமொழிக்கு ஜாமீன் வழங் குவதா இல்லையா என்ற சிபிஐ நீதி மன்றத் தீர்ப்பு வெளி யாவது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்