தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கன வோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்று விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட் டேன்; கிடைக்கவில்லை’ என்ப தாக வே இருக்கிறது.
டாடாவோ, அம்பானியோ பெரி ய முத லோடு தங்கள் தொ ழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங் கித்தான் ஆரம்பித் தார்கள். நிறு வனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொ ழிற்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச் னைகளையும் பிஸினஸமே ன்கள் தவிர்த்து நிச்சயம் வெற் றி பெறலாம்.
தேவை தெளிவான பார்வை!
‘வேலை செய்யப் பிடிக்கவில் லை; அதனால் பிஸினஸ் செய் யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற் றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழி ல் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லா மல் தொழிலில் இறங்கு கிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம் தான். தொழிற்கடன் கேட்டு வங்கி யை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத் தா ன். தொழில் முனைவர் பேசும் ஒவ் வொரு வார்த்தையும் வங்கி தரப் பில் உன்னிப்பாகக் கவனிக்கப்ப டும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில் முனைவரின் உறுதியை க் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்ய லாம்.
‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸி னஸூக்கான ஐடியா உங்களிடம் இருக் கிறதா?’ என வங்கி மேனே ஜர் கேட்ப தாக வைத்துக் கொள்வோம்.
இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உட னே பதற்ற மடையும் பலர், ‘சார், என்கிட்ட இன் னொரு பிஸின ஸூக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்த கைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில்மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டி விடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.
பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?
நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்து விட் டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங் களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீ ர்கள், இனி என்ன செய்யப்போகிறீர் கள் என்ற விவரங்கள் இருக்க வே ண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புது மைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக் கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத் துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.
இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப் பார்கள். Debt-Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து 10 ஆயிரம் போக, குறைந்தது 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால் தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5-க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வரு மானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம் பாகப் பேசலாம்.
கடன் வகைகள்
அடமானமில்லாத கடன் (unsecured loan)
10 லட்சம் வரைக்கு மான தொழிற்கடனுக்கு எந்த விதமான அடமா னமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்த வித அடமானமில் லாமல் கடன் கிடைக் கும்.
ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில் களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (SIDBI) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல் லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீ மில் (Credit Guarantee Scheme CGS) கடன் தருகிறார்கள். ஆ னால் இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட் டால் அவர்கள் இது சம்பந் தமான மற்ற முழு விவரங் களைத் தருவார்கள்.
அடமானக் கடன் (secured loan)
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்க ளுக்கு பணம் தேவை எனில், அட மானம் இல்லாமல் கடன் கிடை க்காது. அந்த சமயத்தில் உங்க ளிடம் இருக்கும் சொத்துகளை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இர ண்டு கோடி ரூபாய் தேவைப்பட் டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்து களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.
எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?
பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப் படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் (Debt-Equity Ratio) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதா வது, ஒரு லட்ச ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதி தான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங் களில் மட்டும் இந்த விகிதத் துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகித த்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடை ப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.
வங்கிகளை எப்படி அணுகுவது?
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறி ப்பிட்ட தொகையை கடனாகக் கொடு க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித் து செயல் படுகின்றன. அந்த இலக் குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனா லும் தொழில் முனை வோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற் குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.
உங்கள் தேவை 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கி களையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்ச த்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழிற் கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (SME Branch) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோச னைகளை வழங்குவார்கள்.
தேவையான ஆவணங்கள்!
அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடை பெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வரு மான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப் பிச் செலுத்தும் காலம் வரைக் கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவை ப்பட்டால்), பிஸினஸ் நடைபெ றும் இடம் உங்களுடையது என் றால் அதற்கான சான் றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவண ங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இவை தவிர, வேறு என்னென்ன ஆவண ங்கள் தேவை என்பதை கடன் விண்ணப்ப திலேயே இருக்கும். அவற்றையும் கொடு த்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்