Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.  
இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி  கனி மொழி கைது குறித்து நிரு பர்களிடம் பேசியது 
கனிமொழி கைது குறித்து அடுத்த  கட்ட நடவடிக்கை  கட்சியின் உயர் நிலை செ யற்குழு கூடி முடிவெடுக் கும் என்றும்    கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயா ன  உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார் 
மேலும்  கனிமொழி கைது குறித்து  உங்கள் மனநிலை என்ற கேள் விக்கு  உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என  தெரிவித்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: