Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் இரவில் பலத்த மழை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது.

இதுதொடர்பாக வானி லை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள தகவலில்,

தென் தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஆந்திரா மாநிலத்தை யொட் டிய வங்கக் கடலில் குறைந் த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகு திகள் சிலவற்றிலும், வடக்கு கடலோர பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்களிலும் இடியோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

காற்று-இடியுடன் கன மழை

தமிழகத்தில் நேற்று தென் மாவ ட்டங்களான மதுரை, திண்டுக் கல், தேனி உள்ளிட்ட பல பகுதிக ளில் பலத்த மழை பெய்தது. மது ரையில் மழை கொட்டித் தீர்த்து விட்டது.

சென்னையில் இரவில் உலுக் கிய இடி – மழை

தலைநகர் சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை மற்றும் பலத்த காற்று, இடியால் மக்கள் பீதி யடையும் அளவுக்கு இருந்தது. புறநகர்ப் பகு திகளில் நல்ல மழை பெய்தது.

இந்த திடீர் கோடை மழை காரணமாக சென் னையில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் சற் று குறைநதுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலையில் கடல் காற்று சீக்கிரமாகவே வீசி வரு வதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று இது மேலும் குறைந்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: