Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தின் முதல் எதிரியே தேவையற்ற பயம்தான்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்  வளவாக நாட்டமிருக் காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வய தில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த விதமும் செக் ஸ் என்றாலே பெண்களி டம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின் றன. உறவைப் பற்றிய தவறான மனப் பான்மை, தேவை யற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண் களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொ டங்கி குழந்தை பிறப்ப தில், பிரசவ வலியில் உள்ள தேவை யற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமை யலாம். உறவின்போ து கணவன் ஒரே மாதிரியான நிலைக ளைக் கையாள்வது அல்லது கண் மூடித்த னமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவி க்கு உறவின் மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல் லாமல் இருப்பதாக தெரிவிக் கிறது ஒரு மருத்துவ ஆராய் ச்சி முடிவு .

கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக் கிற பெண்கள் பலர் இப்பிரச்சி னையால் பாதிக்கப்பட வாய்ப் புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மை க் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்க வும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமை யும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொ ள்வதையே தவிர்ப்பார் கள்.

உடலுறவு என்பது அவ ர்களைப் பொறுத்தவரை யில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெ ண் உறவை வெறுக்கவும் மாட் டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சி னையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விரு ப்பமிருந்தாலும்கூட இப் பிரச் சினையால் பாதிக் கப்பட்ட பெண்கள் சிலரு க்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இண ங்காது. அதனாலேயே உறவின்மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வே ண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத் திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய் யாகும்போது, தன க்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும் போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறை வதாக தெரிவிக் கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண் களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்கா மல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்க ளைச் சொல்லித் தப்பிக் கும் பெண்க ளும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோ ற்றத்தில் திருப்தியில் லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னை யல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள் ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணை யாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக் குத் தன்னைத் தவிர வே று பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண் கள், கணவனின் மீதான வெறுப்பைக் கா ட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில ருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரு ம்போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ள வர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இண ங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கண வனால் அநாகரிகமாக விமர்சிக் கப்பட்டாலோ, குறை கூறப்பட்டா லோ கூட அந்தப் பெண் விரக்தி யடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கி டையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன் போ அல்லது திருமண மான புதிதி லோ தன் வாழ்க்கைத் துணையி டம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இத னாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல் வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் பட படப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவ ற்றால் பாதிக்கப் படும் பெண்களுக்கு செக்ஸி ல் வெறுப்பு வருவது சகஜமான ஒரு வி ஷயம்.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என் பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவ மான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்ற வையும் இப்பிரச்சி னையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உள வியலாளர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: