டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை
பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை.
இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் பாதிக்கப்படுவது முதுகு வலியால்தான்.
நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது சார்ந்த எலும்பு களும்தான். அதனூடேதான் மூளை தொடர்பான தண்டுவ டம் சென்று அத்தனை உறுப்பு களிலிருந்து வரும் தகவல் களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.
இந்த தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே தட்டுக்களும் அதில் ஈரத் தன் மையுடனான சவ்வுகளும் இருப்பதால், நாம் அசைகையில், குதிக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய் யும் போது, ஆட்டோவில் செல்லும்போது என குதிகா லில் அதி ர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது. குண்டு – குழியான பாதையில் இரு சக்கர வாகன த்தில் அடிக் கடி வெகுதூரம் பயணிப் பது, இருக்கை யில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயி
ற்சியே இல்லாமை, எலும்பு களில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு, சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு, முது மை ஆகியவை காரணமாக இந் தத் தட்டுக்கள் பாதிக் கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப் பகுதிக ளில் தீவிர வலி, தசைகளில் இறு க்கம் ஏற்படும். இவற்றுடன் இடு ப்பு எலும்புத் தேய்வு, காரண மாக பிட்டம், பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற் படக் கூடும். காலை உயர்த் தும்போது வலி கூடும். கழுத்து எலு
ம்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலி யும், உள்ளங்கையில் மரத் துப் போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறு வது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும்.
தட்டு நகர்வின் அளவு தி சை மற்றும் எந்தப் பகுதி தட்டுக்கள் பாதித்துள்ளன என்பதைப் பொருத்து வலியும் வே தனையும் மாறுபடும். நோயாளியைப் பரிசோதனை செய் வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத் துல்லி யமாகக் கணிக்க மு டியும். கட்டுப்பாடின் றி சிறுநீர் கழித்தல், உணர்வு மாற்றம் அதிகம் இருப்பின் சி.டி.ஸ்கேன், எம். ஆர் .ஐ.ஸ்கேன் பரி சோதனைகள் தேவைப்படலாம். உணவு, உடற்பயிற்சி, உள் மருந்து, புற மருந்து என சித்த மருத் துவத்தில் கூட்டு
சிகி ச்சை மூலம் இடுப்பு, கழுத் து வலி, தட்டு பிறழ்தல் பிரச்சி னையை நிரந்தரமா கக் குணப்படுத்த முடியும். உருளைக் கிழங்கு, பட் டாணி, காராமணி, வாழை க்காய், அதிக புளி, குளிர் பானங்கள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய உணவுப் பொரு ட்கள் அனைத்தையும் தவி ர்க்க வேண்டும். உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி,
புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர் க்க வேண்டும். மருத்து வரின் ஆலோசனையுடன் கூடிய சரியா ன உடற்பயிற்சி மற்றும் யோகா சனங்கள் ஆகியவை சில நேர ங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற் றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.
சூரிய நமஸ்காரம், திரிகோ ணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்கா சனம், போன்ற ஆ சனப் பயிற்சிகள் மருந்துக ளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும். சித்த மருத்துவத் தில் இந்த நோயை தொக் கண சிகிச்சையான புற மருத் துவ முறையிலும், வர்ம உள்
மருந்துகளாலும் குணப்படு த்த முடி யும். கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சி னை வந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவை யில்லை. சித்த மருத்துவம் அதன் பிரி வான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூல ம் வலியை குறைத்து முழு நிவா ரணத்தைப் பெற லாம்.
ஆங்கில மருந்துகள்:
வலி நிவாரணிகளைக் கொடுப்பார்கள். இல்லை என்றால் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு என்று சொல்லி விடுவா ர்கள். ஆனால் இதனால் பக்க விளை வுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வலி மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல் சரை உண் டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை.
ஹோமியோபதி மருந்துகள்:
cimicifuga, aloes, arnica, rhustox, bryonia போன்ற மருந்துகள் முழு மையான பலனைத் தரும். வலி களைக் குறைப்பதோடு தசைக ளை இலகுவாக்கி நிரந்த ரமாக குணப்படுத்தும். பயோகெமிக் மருந்துகளும், பயோகெமிக் கூட் டுக்கலவை மருந்துகளும் உட னடி பலனை அளிக்கும். மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு ஹோ மியோபதி மருத்துவம் நிரந்தர நிவா ரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவை யில்லை.