“வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிற து” என்கிறார், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி.
வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடு களில் அதிகமாகி வருகி றது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமத மாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரி த்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச் சை மையம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்:
* வாயில் ஏற்படும் கொப்புள ங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.
* வாயில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள் ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.
* நாக்கின் அடியில் சிறு கட்டிகளும், வாயின் மேற் புறத்தில் சிறு புண்களும், வீக்கமான கன்னங் களும், ஈறு வீக்க ங்களும் உண்டாகும்.
* நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் வாயில் உண்டாகும் நோய்களுக்கு கார ணமாகின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்துவதற்கும் சில உணவுகள் உள்ளன.
வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:
கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இத னால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.
பாலாடைக்கட்டி: இதை தின மும் சாப்பிடும்போது, பற்க ளில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அத னால், பற்களின் உறுதி பாது காக்கப்படுகிறது.
கேரட்: கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாது காப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப் படுகிறது.
புதினா: புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இரு ந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்த மாகிறது.
எள்: இவை பற்கள், ஈறுகளைப் பாது காக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.
பற்களில் உண்டாகும் பிரச்சினைகள்:
* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப் போதுதான் அவை ஆரோக் கியமானதாக இருக்கும்.
* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல் மருத்து வரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்ற வற்றில் ஏற்படும் கோளாறு களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற் றமும் காரணம்தான்.
பற்களை பாதுகாக்கும் முறை:
பல் துலக்குதல்: இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற் களை துலக்குவது அவ சியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற் களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப் பொருட் களைச் சுற்றி ஒரு வித அமிலத் தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
கொப்பளித்தல்: சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட சிறு சிறு உணவுத் துகள்களை எளிதில் அகற்றி விடும்.
நாக்கை சுத்தம் செய்தல்: பாக்டீரியாக்களின் வெதுவெது ப்பான படுக்கையாக நாக்கு உள் ளது. அதனால், நாக்கின் மேலு ம், கீழும் நன்றாக சுத்தம் செய் வது அவசியம். தற்போது நாக் கைச் சுத்தம் செய்யும் வகை யில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
பரிசோதித்தல்: ஆண்டுக்கு இருமுறை யாவது பல் மருத்துவ ரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளு ங்கள். அப்போது தான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடை க்கும்.
அம்மா என் கணவருக்கு வாய் புண் வந்த பத்து நாள்கள் ஆகிராது. இன்னும் சரியாக வில்லை. மருத்துவர் ஆலேசனைப்படி மருந்தும் சாப்பிட்டாச்சு இன்னும் சரியாக வில்லை. என்னவாக இருக்கும் .ஏன் இன்னும் என் கணவருக்கு சரியாக வில்ல. அவருக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை. தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்