* கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோத னைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வே ண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்து கொள்ளலாம்.
* பால்மானிச் சோதனை: பால்மானியி ன் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண் ணீர் கலந்த பால் எனலாம். எருமைப் பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழு ப்பு நீக்கப்பட்ட பாலில் 30-32 இருக்கும்.
* கொழுப்பு அறியும் சோதனை: கெர்பர் பியுட்டிரா மீட்டரில் 10 மி. லி, கெர்பர் அமிலம், 10.75 மிலி பால், 1 மி.லி. அமைல் ஆல்கஹால் சேர்த்து கெர்பர் சென்டிரிபியூ ஜில் வைத்து 3 நிமிடம் சுற்றி னால் கொழுப்பு தனியாக தெரி யும். பசும்பாலில் 3-5 சதம், எரு மைப் பாலில் 6-8 சதம் கொழு ப்புச்சத்து இருக்கும்.
* கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு: 0.25 து பால்மானி அள வு (27 டிகிரி செ) + (0.25 து கொ ழுப்புச்சதம்) + 0.44.
* குளிர வைத்தல்: பாலைக் கேன் கூலர் (அ) பல்க் கூலரில் 2டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
* பதப்படுத்துதல்: பாலை 63 டிகிரி செ.க்கு 10நிமிடம் சூடுசெய்து 5 டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாது காக் கலாம்.
*பதப்படுத்துதல்: பாலை 63 டிகி ரி செ.க்கு 30 நிமிடங்கள் சூடு செய்து 5 டிகிரி செ.க்கு குளிர வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் பாதுகாக்கலாம். இத ற்கு குறைந்த வெப்பம், அதிக நேரம் பாஸ்டுரை சேஷன் என் று பெயர்.
கிரீம், வெண்ணெய், நெய் தயாரித்தல்
* கிரீம்: (40 சதம் கொழுப்பு) – பாலை கிரீம் செப்பரேட்டர் மிஷினில் ஊற்றி இயக்கினால் கிரீம் ஒரு புறமும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மறுபுறமும் பிரிந்துவரும். கிரீம் எடுப்பதற்கு கறந்த பாலை அப் படியே உபயோகப்படுத்த வே ண்டும். குளிர்விக்கப்பட்ட பா லில் கிரீம் எடுக்க முடியாது.
* வெண்ணெய்: ( 80 சதம் கொ ழுப்பு) – சூடு செய்து ஆற வை த்த கிரீமை குளிர்சாதனப் பெட்டியில் 1 நாள் வைத்தி ருந்து வெண்ணெய் கடையும் இயந்திரம் மூலம் வெண் ணெய் தயாரிக்கலாம். கிரீ மை இயந்திரத்தில் கால்வாசி அளவே நிரப்ப வேண்டும். இயந்திரம் சுற்றும்பொழுது 10 டிகிரி செ.க்கு குளிர்ந்த நிலையில் இருக்கவே ண்டும். வெண்ணெய் உருவான பிறகு மீதமுள்ள நீரை அடியிலு ள்ள குழாய் வழியே வெளியேற்ற வேண்டும். இந்த வெண் ணெயில் உண்பதற்கென்றால் 3 சதம் உப்பு சேர்க்கலாம். நெய் தயாரிப்பதற்கு என்றால் உப்பை சேர்க்கக் கூடாது.
நெய்: (99.9 சதம் கொழுப்பு) – கிரீம் (அ) வெண் ணெயைக் காய்ச் சினால் நெய் கிடைக்கும். கிரீமில் உறைமோர் ஊற்றி மறுநாள் காய்ச்சினால் நெய் வாசனையுடன் இருக்கும். கிரீமிலிருந்து நெய் தயாரி க்கும்பொ ழுது கசடு அதிகமாக இருக்கும்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்