மனித மூளையில் போதுமான அளவு ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது மயக்கம் வரும். கெட்ட செய்தியைக் கேட்பதாலும் பயப்படுவ தாலும், விபத்தாலும், பயங்கரமான காட்சியை க் காண்பதாலும், திடீர் தாக்குதல், களைப்பு, உஷ்ணத்தினாலும், வியாதிகளாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் மயக்கம் ஏற்படும்.
அறிகுறிகள்:
முகம் வெளுத்துப் போகும்
- திடீரென்று உணர்ச்சியற்றுப் போ வார். தலை கிறுகிறுக்கும். தடுமா ற்றம் ஏற் படும்.
- தோல் குளிர்ச்சியடைந்து, பிசுபிசுப் பாகும்.
- மூச்சு லேசாக இருக்கும்
- நாடித்துடிப்பு பலவீனமாகவும், மெதுவா கவும் இருக்கும்.
உடனடிச் சிகிச்சை முறைகள்:
* ஒருவருக்கு மயக்கம் ஏற்படுவதைப் போலத் தோன்றினால் சீக்கிரமாய் தலையைக் கீழே குனி ய வைக்க வேண்டும். குறிப் பிட்ட நபர் உட்கார்ந்திருந்தா ல் முழங்கால்களுக்கு இடை யே தலையைத் தாழ்த்தி வை க்க வேண்டும். அல்லது தாழ் த்திப்படுக்க வைக்க வேண் டும்.
* போதுமான தூய காற்றுப் படும்படி செய்ய வேண்டும்.
* கழுத்திலும், இடுப்பிலும், மார்பிலும் சுற்றியுள்ள ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.
* மயக்கம் அடைந்தவர் மறுபடி தன்னிலைக்கு வரும்போது அவ ரை நிமிர்த்தி தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை சிறிது சிறி தாகக் கொடுக்க வேண்டும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்