திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலை முறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என் பதால் தான் திருமணத்தை ஆயி ரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப் பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவது தான் என் றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்ய ப்படுவதாக பழமொழி தெரிவிக்கின்றன.
திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனை வி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போன்ற பழமொ ழியும் வழக்கத்தில் உள்ளன.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்வதோடு மட்டுமல்லாது காதல் திரு மணங்களும் பெருகி வரும் இன்றைய கால கட்டத்தில் திருமணம் மற் றும் குடும்ப வாழ் க்கையின் அவசியத்தை இன்றைய தலைமுறை யினர் எந்த அளவிற்கு உணர்ந்து வைத்துள்ளனர் என்பது புரியாத புதிராக உள் ளது.
அதனால்தான் சின்ன சின்ன கருத்து மோதல்களுக்கு எல்லாம் விவாக ரத்து கேட்டு நீதிமன்றத்தின் படிக ளை ஏறு வோரின் எண்ணி க்கை அதிகரித்து வருகிறது. காதல் திரு மணமோ, நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ எதுவாக இருந் தாலும் தம்பதிகள் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.
குடும்ப பிரச்சினைகளில் பெரும்பாலும் கணவனது குடிப்பழக்கம், வேலை யில்லாத கணவன், கு டும்பத்தை நடத்துவதற்கான வ ருமானம் இன்மை, கணவரது தாய் மற்றும் தமக்கையரின் கொடுமை, அல்லது பாலிய ல் பிரச்சினைகள் போன்ற வை ஒரு பெண்ணிற்கு எதிரா க நிற்கின்றன. பெரும்பாலு ம் திருமணத்திற்கு முன்பு, கண வரது வீட்டார் கூறும் பொய் களே, பல விவாக ரத்துகளுக்கு அடிப்படையாக உள்ளது.
இதேபோல, குடும்பத்திற்கு ஒத்து வராத பெண், குடும்ப சூழ்நி லைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளாத பெண், ஊதாரித் தன ம், பல ஆண் களின் சகவாசம், குடும்பத்திற்கு அடங்காத பெ ண் போன்றவை ஆணின் முன் நிற்கும் பிரச்சினைகளா கும்.
சவால்களை சமாளியுங்கள்
கணவனோ, மனைவியோ எந் த விதத்தில் பிரச்சினை வந்தா லும், இருவரும் ஒரு அணியி ல் நின்று பிரச்சினையை சமாளி க்கும் போது குடும்பம் வலு ப்பெறும். ஆனால், அவர்களுக்குள்ளாகவே பிரச்சினையை உரு வாக்கிக் கொண்டு இரு அணிகளாக நின்று போராடும் போது குடும்ப உறவுக்குள் பல துர்தேவதைகளின் ஆதிக்கம் மே லோ ங்கும். அது பெண்ணின் தாயாகவும் இருக் கலாம், ஆணின் தாய் மற்றும் தமக்கைகளின் ஆதி க்கமா கவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், நமது அன்பாலும், பொறுமையாலும் ஒருவரை அனுசரித்துச் சென் று வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வது எவராலும் முடி யும் விஷயம்தான். என வே, பிரச்சினை துவங்கும் போதே அதைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொ ள் ளலாம். எதையும் அறிவுப்பூர்வமாக ஆராயாமல், மனப்பூ ர்வமாக ஆராய்ந் தால் நல்ல வழி கிட்டும்.
விட்டுக்கொடுத்தல் அவசியம்
இந்தக் கால இளம் தலைமுறையினரு க்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன் மை போ ன்ற நற்குணங்கள் இல்லாத கார ணத்தா ல்தான் விவாகரத்து வழக்குக ளின் எண்ணி க்கையும் அதிகரித்துக் கொ ண்டே போகிறது. விவாகரத்து கேட்டு நீதிமன்றப்படியேரும் தம்பதிகளுக்கு உடனடியாக வழக்குப் பதிவு செய் து விவாகரத்து வழங்கப்படுவதில்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோச னை வழங்கப்படுகிறது. தேவைப்பட்டா ல் பல தடவைகூட ஆலோசனை நட த்துகிறார்கள்.
முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இந் த நீதிமன் றங்கள் முயற்சி செய்கின்றன. இறுதி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந் தாலோ அல் லது இருவரும் பிடிவாத மாக இருந் தாலோ வழக்கு நடத்தி விவா கரத்து வழங்கப் படுகிறது.
விவகாரத்திற்கு அடிகோலும் விவா தம்
வீட்டிற்கு வீடு வாசற்படி இருப்பது போ ல சண்டை ஏற்படாத வீடு என்று எங்கேயும் இல்லை. ஆனானப்பட்ட சிவனுக்கும் பார்வதிக்குமே சண்டை ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கி ன்றன. அப்படியி ருக்கையில் நாம் சாதாரண மனிதர்கள் தானே.
வீட்டில் பிரச்சினைகள் உருவாகி சண்டை ஏற்படும் போது இரு வரு ம் ஒரேசமயத்தில் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்ப டுகின்ற பிரச்சி னைகளில் ஒரு வர் மற் றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச் சி அடையுங்கள். விட் டுக் கொ டுப்பவர்கள் கெட்டுப் போவதி ல்லை எப்பொழுதுமே! விவா தம் தவிர்க்க முடி யாதது என் றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடு ங்கள்.
தேவை அன்பான வார்த்தை
ஒரு நாளைக்கு ஒரு முறையா வது ஒரு அன்பான வார்த்தையோ அல் லது வாழ்த்தோ உங்கள் துணை யிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொ ள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். கடந்தகால தவறு களைச் சுட்டிக் காட்டாதீர்கள். விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புட னும் செய்து பாருங்கள். மேலும், உலகத்தி ற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்க ளுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
மூன்று தாரக மந்திரங்கள்
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந் திரங்கள். (இவற்றை எப்போதும் மனதில் கொ ள்ளுங்கள்) சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள் ளுதல். அனுசரித்துப் போகுதல்.மற்றவர்களை மதித்து நடத்தல். நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது. இதனை அனைத்து தம்ப திகளும் பின்பற்றி வந்தாலே பெரும்பாலான குடு ம்ப பிர ச்சினைகள் வராது. அப்ப டியே தலை தூக்கினாலும் அவை பெரிய அளவில் உரு வாகாது. நீங்களு ம் திருமணமானவராக இருப்பின் இதனை பின்பற்றிப் பாருங்கள். உங்கள் இல்லறம் நல்லறமாகும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்