ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொ ட்டி வியாழன் அன்று இரவு மவு லீது ஓதப்பட்டு விழா துவங் கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொ ண்டனர்.
ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுரா கிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக் கூடு திருவிழா வியாழன் அன்று துவங்கியது. மாலை 6 மணிக்கு மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு விழா துவ ங்கியது. முன்னதாக மாவட்ட அரசு காஜி சலா ஹூத்தீன் உலக மக்க ளின் அமை திக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின், பாதுஷா நாயகம் சமாதியில் சந்தனம் வைக்கப்பட்டது.
இந்து, முஸ்லிம்கள் தேசிய ஒருமைப் பாட்டு விழாவாக கொண்டாடப் படும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அக்.,8ல் கொடியேற்றம், 20ல் சந்தன க்கூடு, 28ல் கொடியிறக்கம் செய்யப் பட்டு பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப் பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடு களை தர்கா ஆணையாளர் ராமராஜன் செய்து வருகிறார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்