Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஊராட்சி ஒன்றியத்தில் தேனி பெண் நாயகியாக …

புதிதாக எடுக்கப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமலி என்ற பெண் நாயகியாக நடிக்கிறார். பூந் தோட்ட காவல்காரன், புலன் விசா ரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளி ட்ட பல படங்களுக்கு வசனம், திரை க்கதை எழுதியதுடன், ஏழை ஜாதி, பாட்டுக்கொரு தலைவன், எங்க முதலாளி உள்ளிட்ட ஐந்து படங் களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான். இவர் தற்போது ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோ வாக ஸ்ரீதர் என் பவர் அறிமுகமாகிறார். தேனி மாவட்டத்தை சேர் ந்த தமிழ்ப் பெண் தமலி ஹீரோயினாக அறிமுகமாகும் இப்படத்தில் ஆர். சுந்தராஜன், கஞ்சா கருப்பு, ராஜேந்திரன், லாவண்யா, சாதனா, திண்டு க்கல் ஜெயபால், செல்லத் துரை மற் றும் பலர் நடிக்கின்றனர். மேலும் முன்னணி நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிரு க்கிறார்.

இந்த படத்திற்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே.எம். கிருஷ் ண மூர்த்தி. புதிய படம் பற்றி டைர க்டர் கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவின் உயிர் நாடி எங்கே இருக்கிறது என்ற போது அது கிராமத்தில் இருக்கிறது என்று பதிலளித்தார் காந்தி. கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னே றும். நாட்டின் பொருளாதார வள ர்ச்சி கிராமங்களை வைத்தே மதிப் பிட முடியும். என்று காந்தி கடைசி வரை வலியுறுத்தி வந்தார். நாட்டி ன் முதுகெலும்பாக இருக்கும் கிரா மங்கள் சரியாக இருந்தால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் இன்றைய நிலை என்ன? கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை. அரசு போடும் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் கிராம ங்களை சென் றடைய வேண்டும். அதற்கு அந்த ஊராட்சி சரியாக செயல் பட வேண் டும். ஊராட்சி மன்றத்துக்கும், ஊராட்சி ஒன் றியத்துக்கும் உள்ள வேறு பாடு கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இளைஞர்கள் அரசி யலுக்கு வரவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த நினைப் பதில்லை. இந்த கருத்தை செய்தியாக சொ ல்லாமல் புதுக்கோட் டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்ன ணியில் ஜனரஞ் சகமான கதையோடு சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்க ளின் விழிப் புணர்ச்சியை வலியுறுத்துகிற இக்கதையில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞர், ஊராட்சி நிலையில் உள்ள சிற்றூரை ஊராட்சி ஒன்றிய நிலைக்கு எப்படி மாற்றி உயர்த்துகிறார் என்பதை காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என சுவாரஸ்யம் கலந்து உருவா க்கியி ருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

எஸ்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.பிரசாத் இசை யமைக்கிறார். கலைக்குமார் பாடல்கள் எழுத, ராஹிட் ஸ்டூடியோஸ் சார்பில் கோவை.பி.தண்டபாணி, எஸ்.பி.ராஜா இணைந்து தயாரிக் கின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: