தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது.
தீபாவளியன்று அதிகாலை யில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங் கா ஸ்நானம்’ என்று கூறு கிறோம்.
அஞ்ஞானம் என்னும் `இருள்’ மறைந்து மெய்ஞானம் என் னும் `ஒளி’ பிறப்பதை உணர் த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோ ன்றும் போது இந்தப் பண்டிகையை கொண் டாடுகிறோம்.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்ப தால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெயில் தனத்தி ற்கு அதிபதியான லஷ்மியும், வெந்நீ ரில் கங்காதேவியும் வாசம் செய்வதா க புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் இந்த எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்’ என்று கூறுகிறோம்.
கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக தீபாவளி எண்ணெய்க் குளி யல் கருதப்படுகிறது. இந்த நாளில் காசியிலுள்ள கங்கையாற்றில் நீராடி அங்குள்ள விஸ்வநாதர்-விசாலா ட்சி அம்மன் கோயிலுக் குச்சென்று வழிபடுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளன ர்.
தீபாவளி அன்று வீட்டின் பல பகுதிகளி லும் தீபங்களை ஏற்றி வைத்து மகா லஷ்மியை தியானித்து வழிபட வேண் டும். மாலையில் வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைத்தல் அவசியம். தீபாவளி அன்று குறை ந்தது 21 விளக்குகளையாவது ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு.
புதிய பொருட்களை வாங்குவ தற்கும், வர்த்தக, வியாபார நிறுவன ங்களை தொடங்குவ தற்கும் உகந்த நாளாக தீபா வளி கருதப்படு கிறது. சிலர் இ ந்த நாளில் தங்கள் நிறுவன கணக்குகளையும் புதிதாகத் தொ டங்குவார்கள்.
புதிய நகைகள் வாங்குவது, புதிய ஆடைகள் வாங்குவது உள்பட இனிப்புகள், பலகாரங்களுடன் இந்த பண்டிகையை உவகைபொங்க கொண்டாடுகிறோம். தீமை அழிந்து மகிழ்ச்சி ஏற்பட்ட நாளைக் குறிக்கும் வித மாகவே தீபாவளி நாளில் பட்டா சுகளையும் ஒளிரச்செய்து மகிழ் கிறோம்.
தீபாவளிப் பண்டிகையன்று அதி காலையில் எழுந்துவிடுவதுடன் இரவிலும் அதிக நேரம் கழித்தே தூங்கச் செல்கிறோம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்