Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
குழந்தைப் பேறு – தந்தை பெரியார் அனுபவம்
by V2V Admin
—–8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரை யாடியதன் தொகுப்பிலிருந்து…. “விடுதலை” 9.3.1970.
டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணி யில் தாங்கள் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இரு ந்தால், தாங்கள் முதல் முத லாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந் தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற கருத்து தங்களுக்கு எப்படித் தோன்றியது என்று கூறினால் பரவாயில்லை.
பெரியார்: எனக்குச் சின்ன வயசிலேயே ரொம்பச் செல்லப் பிள்ளை மாதிரி எல்லோரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அதிலே எனக்குக் கொஞ்சம் ரொம்ப வேகமாக கருத்துகளெல்லாம் தோன்றும். அது தப்பு, இது தப்புன்னு கருத்துகளெல் லாம் எனக்குத் தோனும். அதை நான் சாதாரணமா, தைரியமா வெளியிடு வேன். அந்த முறையிலே மத சம்பந் தமா, இலக்கிய சம்பந்தமா, அது அது சம்பந்தப்பட்டவங்ககிட்ட வாதாடி வாதாடி ஒரு மாதிரி, பொதுவா சொன் னா, ஒரு வாயாடி என்ற நிலைமை க்குப் பேரு வர்றபடி வாதாடிட்டு இரு ந்தேன். அதே போக்குலேதான் ஜனங்களண்டைப் பழகும்போது இந் தப் புள்ளைக் குட்டி அதிகமா பெத்துக்கிட்டு இருக்கிறவங்க படற கஷ்டம். நம்ம கிட்ட வந்து முறையிடுற முறை; புருஷன் – பெண் ஜாதி சண்டை போட்டுக்கிட்டு வர்ற கலவ ரம் இவற்றையெல்லாம் நான் சீரியஸா கவனிக்குறபோது இந்தப் புள்ளைங்களாலே பெரிய தொல்லைப்படறாங்க. இயற்கையா இருக்கிற தொல்லை தவிர, புள்ளைக் குட்டிங்களாலும் வேற தொல் லைப் படறாங்கன்னு கண்டேன்.
வேடிக்கையா சொல்றேன். குடிஅரசு ஆபீ சிற்கு எதிர்த்தாப்பலே ஒரு வீடு. குடித் தனக்காரர் வீடு. அவங்க நம்ம ஜாதியில்லை. எங்க ளுக்கும் அவங்களு க்கும் ஒரு மாதிரியான முறை. அண் ணன் – தம்பி, மாமன் – மச்சான்னு கூப்பி டுவோம். அந்த முறையிலே எதிர் த்த வீட்டுக்காரன் ஒருத்தன், அவன் எனக்கு மாப்பிள்ளையா வேணு ம். அவன் மனை விக்கு நான் அண்ணனா வேணும். இந்த மாதிரி இருக்கும். அவனுக்கு நாலு குழந்தை. கைக் குழந்தை ஒண் ணு. அந்த நிலையில அவன் கோவம் வந்து பெண்டாட்டியைப் போ ட்டு அடிச்சுப் புட்டான்.
அப்போ நான் இங்கிருந்து சிபாரிசுக்குப் போய், என்னடா! இந்த மாதிரி பண்றியே, கொள்றியே? குழ ந்தை குட்டிகளுக்கு இந்த மாதி ரிப் பண்ணுறியே? அப்படின்னு ரொம்பக் கடினமாகக் கேட்டதுக்கு, இதைப் பத் தி எல்லாம் நீ கேக்காதேங்கிற அள வுக்கு வந்திட்டான். அந்தக் கோவத் தினாலே, அந்தம்மா அழுதுப்புட்டுச் சொல்றபோது ஒரு வார்த்தைச் சொ ன்னா. இந்த மாதிரி இவருகிட்டே இன்றைக்கு, நேத்திக்கல்ல, நான் பட ற அவஸ்தை; கொஞ்ச நாளாவே ஒதை தின்னு தின்னு எனக்கு ரொம்ப வேதனையா போச்சு; அதனாலே போயி எங்காவது ஆத்தில – குளத் தில இறங்கிடலாம்னு முடிவு; இவற்றை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணட்டும்? நான் ஒருத்தி விழறதா இருந்தா இதுங்க கதி என்ன வாகும்? இல்லாட்டா இவை களையும் தள்ளிப் போட்டுல்ல நான் விழவேணும். இந்தக் கொலை க்கு நான் ஏன் பாகப்படணும்னு இந்த ஆளுகிட்ட உதை தின்னுக் கிட்டிருக் கேன். இல்லாட்டா நான் போய் விழுந் திடுவேன், ஆத்திலே அப்படின்னு அவள் சொன்னாள்.
வாய்த் துடுக்கு முறையிலே சரி ஏன் இப்படிப் பெத்தே நீ? உன்னை யாரு இவ் வளவு பெத்துக்கச் சொன்னா? பெத்துக் கிட்டியே வேத னைப்படறியே அப்படின்னேன்.
அப்ப அந்த அம்மா பேச்சோட பேச்சா அது நம்ம செயலில்லே, அது பகவான் செயல்; அப்படிப் பண்ணிட்டது; நான் என்ன பண்ணட்டும்? அப்படின்னு சொன்னா. அப்பதான் அந்தப் பகவான் செயலைக் கண்டிச்சுப் போட்டு நான் அன்னிக்கே வந்து எழுதியிருக்கிறேன். இந் த மாதிரி குழந்தைகளைப் பெத்துக்கிட்டு சங்கடப்படறாங்க. இப்படி கிணத்துல விழுந்துட துணிஞ்ச பொம்ப ளைகூட – இந்தப் புள்ளைக ளை வெச்சு க்கிட்டு, எப்படி நான் விழுகிறது. இதை யும் போட்டுட்டு விழுகிறதுன்னா, எனக் கு இதா இருக்குதேன்னு விசன ப்படறா ன்னு வேடிக்கையா அப்ப வந்ததுதான்.
வந்ததுக்கப்புறம் நாம சீரியஸா எழுதி ட்டு இருந்தமா. பிரிட்டிஷ் நியூஸிலே வந்தது இந்தச் சங்கதி, இங்கிலீஷ் பத்தி ரிகையிலே! அதை எடுத்துத்தான் எழு திக்கிட்டிருக்கேன். நம்ம கருத்துக்குச் சரி யா இருந்தது. அப்ப எங்கிட்ட இருக்கிற கிளார்க் ஒருத்தர் கொஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சவர். அவருகிட்டே சொன்னேன். இதை மொழி பெயர்த்தி டலாம்னு. அதைத்தான் முதல் முதல்லே செய்தோம். அப்படியே எண்ணம் வளர்ந்து போச்சு.
எனக்கு முதல் மனைவியாயிருந்த நாகம் மை கல்யாணமாகி கொஞ்ச வருஷம் ஆன வுடனே ஒரு குழந்தை பொறந்து செத்துப் போச்சு. இந்தக் குழந்தையை நான் பார்க் கவும் இல்லை. அய்ந்து மாதம் ஆச்சு. அய் ந்து மாசமா நான் அதைப் பார்க்கக்கூட இல் லை. எனக்கு அவ்வளவுதான். மறுபடியும் அந்தம்மாகிட்டே சொன்னேன்.
எனக்குக் குழந்தை இல்லேன்ற பேச்சே நாம வைச்சுக்கக் கூடாது இங்கே; அப்படி இப்படி ன்னு அந்தம்மா கெஞ்சுவாங்க. ஒரு புள்ளை மாத்திரம் இருக்கட்டும். வேறு இல்லாட்டி போகட்டும். நம்ம குடும்பத்துக்கு ஒன்னுன் னா நூறு புள்ளை நாம எடுத்து வளர்த்து டலாம்னு சொன்னேன்.
அதனாலேயே ரெண்டு, மூணு புள்ளை வளர்த்தேன். அதுக்கு நான் ரொம்பவும் உபதேசம் பண்ணினேன். நம்மளுக்குக் குழந்தை வேண் டாம்னு. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்தது. அந்தக் குழந்தை பெக்கறது ஒரு நியூசென்ஸ்னு எனக்குப் பட் டது. என்னை ராமேஸ் வரத்துக் கெல்லாம் கூட்டி க்கிட்டுத்தான் வந்தாங்க. குழந்தைக் காக, ஆமா எங்க ஊரிலேகூட கணபதி, அரச மரம், வேப்ப மரம், கல்யாண மரம் இதெல் லாம் பண்ணிருக்காங்க. என க்குப் புள்ளே வே ண்டா ம்னு அப்படி பழகி ச்சு, அது என்னவோ பிராக்டிகலா ரொம்ப வள ர்ந்து போச்சு அந்த எண்ணம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;—சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ….
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;—சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;—சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ….
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/