“கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,” என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. “அணு உலையால் உயிருக்கே ஆபத் து’ என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் அப்துல் கலாம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம் தலைமுறைக்கான அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண் டுள்ளது. இங்கு மின்தடை ஏற் பட்டாலோ அல்லது குளிர்விப்பா னில் தடை ஏற்பட்டாலோ, நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப் படும் தானியங்கி வசதி உள்ளது. இந்த வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கு மட்டுமே உள்ளது. கதிர்வீச்சு அபாயமி ல்லை: அணுஉலையில் எரிபொருள் உருகி கீழே விழுந்தால், அதன் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு, அந் த எரிபொருளிலிருந்து கதிரியக்கத்தை செய லிழக்கச் செய்யும். மேலும், கதிர்வீச்சு வெளியாவதை தடுப்பதற் காக, இரட்டை சுவர் முறையில் அணு உலை நவீனமாக அமைக்கப் பட்டுள்ளது. இதனா ல், கதிர்வீச்சு அபாயமும் இங்கில்லை. இந்த அணுஉலை பாது காப்பில் எனக்கு முழுதிருப்தியுள்ளது.
ஏன் பயம்? அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக் கும், மத்திய அரசிற்கும், இப்பிர ச்னையில் சமரசம் செய்வதற் கான தூதராக நான் இங்கு வர வில்லை. அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தெரிந்ததன் காரணமாகவே இங்கு வந்துள் ளேன். இந்த அணு மின் நிலை யத்தைப் பற்றி பொதுமக்கள் பயப்படவேண்டாம். எனக்கு பயிற்றுவித்த சிவ சுப்பிரம ணிய ஐயர் உள்ளிட்ட ஆசிரியர் கள், எதிலும் குறைகாணக்கூடாது என்றே கூறியுள்ளனர். பொது விஷயங்களில், அதன்படியே நான் நடக்கிறேன்.
பாதிப்பு வராது: இங்கு யுரேனியத்தில் வரும் 25 சதவீத கழிவு, கடலில் கொட்டப்படாது. உலகளவில் அணுஉலையில் இதுவரை மொத்தம் ஆறு விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஒன்று கூட நடக்கவில்லை. ஆயினும், அதுபோலவோ அல் லது அதைவிட பெரிதாகவே விபத்து நடந்தாலும், இங்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெ னில், கூடங்குளம் அணுமின் நிலையம், கடல் மட்டத்திலி ருந்து 13.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும், பூகம்பம் ஏற் படாத பாதுகாப்பான 2வது இட த்திலுள்ளது. இதனால், பூகம் பம், சுனாமியால் இந்த அணு மின் நிலையம் எவ்வகையிலும் பாதி க் கப்படாது.நெல்லை நெல்லையப்பர் கோவில், 1,000 ஆண்டுகளு க்கு முன் கட்டப்பட்டது. அதுபோலத்தான் தஞ்சை பெரிய கோவி லும் கட்டப்பட்டது. அவை, இன்றும் நிலைத்து நிற்கின்றன. கடல் அலை அரிப்பால் ஆபத்து ஏற்படுமென நினைத்திருந்தால், கல்ல ணையை கரிகாலன் கட்டியிருக்க மாட்டார். எனவே, எல்லாவற் றிலும் நம்பிக்கைதான் நல்லது.
இங்கு என்னை சந்தித்த 15 கிராமங்களைச் சேர்ந்த 40 பேர், மின்சாரம் மிக முக்கிய ம். ஆகையால், இங்குமின் உற் பத்தியை விரைந்து துவக்க வேண்டும் என்றனர். நாங்கள், 1979ல் பி.எஸ்.எல்.வி., -3, ராக் கெட் தயாரித்தபோது, விபத்து ஏற்பட்டதில், எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் என்னிடம் நிச்சயம், இந்த ராக்கெட்டை அடுத்தாண்டு விண்ணில் ஏவுவோம் என்றார். அதன்படி, ராக்கெட்டும் ஏவப்பட்டது. எனவே, நம்பிக்கை அவசியம். அதுபோல, இந்த அணுமின் நிலைய பாதுகாப்பையும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.புயல், சூறாவளி ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தாண்டு, கடைசியில் இங்கு 1,000 மெகாவாட், அடுத்த ஆறு மாதத்தில் 2,000 மெகாவாட், அடுத்தபத்து ஆண்டில் 4,000 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், கூடங்
குளத்தை அணுஉலைப் பூங் காவாக மாற்ற வேண்டுமென் பது எனது விருப்பம். இவ்வா று அப்துல் கலாம் நிருபர்க ளிடம் கூறினார்.
பேட்டியின் போது, இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே. ஜெயின், கூடங் குளம் அணுமின் நிலைய வ ளாக இயக்குனர் காசி நாத் பாலாஜி, அதிகாரிகள் உடனிருந்தனர்.
ரகசியமாக வைக்கப்பட்ட கலாம் வருகை :*பாதுகாப்பு கருதி அப் துல் கலாமின் கூடங்குளம் பயணம், நிகழ்ச்சி விவரம் மிக ரகசி யமாக வைக்கப்பட்டிருந்தது
*நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பிற்கு கலாம் வந்தார்
* நேற்று காலை சரியாக 9.30 மணியளவில், காரில் அணு மின் நிலைய வளாகத்திற் குள் நுழைந்தார். அவருடன், இந்திய அணு சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் வந்தார்.
* அணுமின் நிலையத்தில் அதிகாரிகள், விஞ்ஞானிகளி ன் ஆலோச னை நடத்திவிட்டு, அணுஉலை 1, 2ஐ ஆய்வு செய்த கலாம், அணு மின் நிலைய ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
* அப்துல் கலாமிடம் பேட்டியெடுக்க தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகை நிருபர்கள், “டிவி’ நிருபர்கள் ஏராளமானோர் இங்கு குவி ந்தனர்
*மதியம் 1.15 மணிக்கு நிருபர்களை சந்தித்த கலாம், முக்கால் மணி நேரம் பேட்டியளித்தா ர். அணுஉலை குறித்த நிருபர்களின் சரமாரி யான கேள்விகளுக்கு, ஆசிரியர் போல் விளக் கமாக பதில் கூறினார்.
*பிரச்னை தவிர்ப்பதற் காக கூடங்குளம் அணு மின் நிலையம், சுற்று ப்பகுதியில் பலத்த போ லீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
* அணுஉலை ஆய்விற்கு கலாம் சென்றபோதும், அணு உலை ஆதர வாளர்கள் அவரை சந்தித்தபோதும், அதை படமெடுக்க பத்திரிகை யாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
“சந்ததிகள் வாழ கூடங்குளம் அவசியம் தேவை’:கலாமிடம் நிருபர் ஒருவர், “”கனவு காணுங்கள் என்கிறீர்கள். தங்களின் எதிர்கால சந்த திகள் நன்றாக இருக்க வேண்டுமென்ற கனவில் தானே, போராட்டக் காரர்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர் க்கிறா ர்கள்,” என, கேட்டார்.
இதற்கு பதிலளித்த கலாம், “ஒரு விஞ்ஞானி என்ற மு றையில் மின்சாரத்தின் தே வையை நன்கு அறிந்த வன் நான். எனவே, இப் பகுதி மக்க ளின் சந்ததிகள் சிறப்பாக வா ழ இந்த அணுமின் நிலையம் அவசியம் தேவை. இங்கிருந்து, இந்தியா முழுமைக்கும் மின் சப்ளை செய்யும் நிலைமை வரவேண்டும். பொதுமக்கள் பயப் படுவது போல, இங்கு விபத்து நடக்காது,” என்றார்.
அவசியம் இல்லை: மின்உற்பத்தியை துவங்க வலியுறுத்தி அணு மின் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை சந்தித்த கலாம், போராட்டக்கார்களை சந்திக்க செல்லவில்லை. இதுகுறித்து கலா மிடம் கேட்டபோது,”” இந்த அணுமின் நிலையம் குறித்து பொது மக்கள் பயப்படத் தேவையி ல்லை. ஏனெனில், மின் தே வை நமக்கு அவசியம். அது முக்கியம். மின் உற்பத்தி துவ ங்க வலியுறுத்தி இங்கு என் னிடம் மனு கொடுக்க வந்த வர்களை நான் சந்தித் தேன். அதேபோல, போராட்டக்காரர் களும் இங்கு வந்தால் அவர் களையும் சந்திப்பேன். மாறா க, நான் அவர்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டிய அவசிய மில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்களை என்னுடைய apj@abdulkalam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப லாம்,” என்றார்.
“இந்த அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது குறி த்
த என்னுடைய கருத்தை பொது மக்களிடம் வெவ்வேறு வழிகளில் தெரி விப்பேன். டில்லியில் நடக்கவுள்ள அணு சக்தி மாநாட்டிலும் இதுகுறித்து பேசு வேன். இந்த அணுமின் நிலையம், இப்ப குதி மக்க ளின் வரப்பிரசாதம். மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பும், நல்லொழுக் கமுமே முக்கியம். இந்த அணுமின் நி லை யத்தால் பொது மக்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமை யும் என்றும் அவர் மேலும் கூறினார். பின்னர், காரில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை சென்றார்.
thanks to dinamalar