Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் – மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் போன்று பாக்கியங்கள் கிடைக்கும்.

கீழாம்பூர் வெங்கடேச பெருமாள் ஆலயம்
த்யான ஸ்லோகம்

விநா வேங்கடேஸஆம் ந நாதோ ந நாத
ஸதா வேங்கடேஆம் ஸமராமி ஸ்மராமி |
ஹரே வேங்கடேஆ ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேஆ ப்ரயச்ச ப்ரயச்ச ||

ஊர் பெயர் காரணம்

கல்வெட்டு செய்திப்படி ஆம்பல் பூக் கள் அதிகம் காணப்பட்ட ஊர் என்ப தால் ஆம்பலூர் என்று ஆனதாகத் தெரி கிறது. வடமொழியில் இவ்வூரை சிநே கபுரி என்று சொல்கி றார்கள். சிநேகபுரி என்று அழைக்கப்பட்டதற்கான கதை தனியாகத் தரப்பட்டுள்ளது. சிநேகம் என்றால் அன்பு. புரி என்றால் ஊர். அன் பு + ஊர் அன்பூராகி பின்னர் பேச்சு வழக் கில்  ஆம்பூராகி இருக்க வேண் டும். முத லில் தோன்றிய பெருமான்.

ஆம்பூர்

மக்கள் முதலில் சன்யாசி மேடு என்னும் பகுதியில் வசித்ததாக வும் பின்னர் காலப்போக்கில் பாண்டிய சேர சோழப் படைகள் மோதிக் கொண்டபோது கி.பி. 1500 வருடம் வாக்கில் மேற்கு நோக்கிச் சென்று ஊரின் தெற் குப்பகுதியில் முதல் குடியிரு ப்பை அமைத்ததாகச் சொல் கிறார்கள். பின்னர் ஊரின் வட பகுதியிலும் குடியி ருப்புக்கள் உண்டாயின. முதலில் தெற்குத் தெருவில் ஸ்ரீ வெங்டேசப் பெரு மா ள் ஆலயமும் பின்னர் வடக்குத்தெருவில் பெருமாள் ஆலயமும் வந்ததாக அறியப்படுகிறது. இ வ்விரு ஆலயங்களுக்கும் நடு வில் ஊரின் பொதுவான சிவன் கோவிலும் உள்ளது. காசி விஸ் வநாதர் சுவாமியின் பெயர். விசாலாட்சி அம்பாளின் பெயர். ஊரின் வட பகுதியில் முதலில் விநாயகப் பெருமானுக்கு ஆல யமும் எழுப்பப்பட்டது. தெற் குத் தெருவில் உள்ள பெருமா ள் பெயர் ஸ்ரீ வெங்கடேசப் பெரு மாள். தாயார் பெயர் பூமிதேவி நீளாதேவி. பெருமாளின் வலது கை புறம் பூமிதேவியும் இடக்கை புறம் நீளா தேவியும் நின்ற கோல த்தில் காட்சி தருகின்றனர். மூலவர் சன்னதிக்கு எதிர் த்தார்போல் கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளிப்பிரகாரத்தில் வேப்பமரத் தடியில் நாகப் பிரதிஷ்டைக ளும் உள்ளன. வைகா சன ஆக மத்தில் பூஜைகள் நடை பெறுகி ன்றன.

கல்வெட்டு

மேல் ஆம்பூர் பூங்குறிச்சி குளக் கரையில் 1916 ஆம் ஆண்டு எடுத்த 519 வது எண் கல்வெட்டு சகம் 1560 (கொல்லம் 813) ஆம் ஆண்டு சிவசைலநாதருக்கு வழிபாடு செய்வதைத் தலையாய கட மை யென ஆம்பூர், ஆழ்வார் குறிச்சி, கடையம் ஊர்மக்கள் மேற் கொண்டனர் என்ற செய்தியும் பணம் நிலம் முதலியன கொடு த்தனர் என்ற செய்தியும் உள்ளது.

கீழாம்பூரில்

சத்திரத்தை ஒட்டிய பகுதியில் எடு க்கப்பட்ட கல்வெட்டில் (518 எண் கல்வெட்டு) வட்டெழுத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. வேணா ட்டு அரசன் இரவிவர்மனைக் குறித்த செய்தியும் உள்ளன. இந்த இரவிவர்மன் என்னும் கேரள அர சன் தன் மனைவியிடம் கோபம் கொண்டு விலகியிருந்ததாகவும் பின்னர் கீழாம்பூரிலுள்ள தெற்குத் தெருவில் காட்சிதரும் ஸ்ரீ வெங் கடேச பெருமாள் மற்றும் பூமி நீளா தேவியை தரிசனம் செய்து ஒன்று சேர்ந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

தீர்த்தம்

கடனா நதி. இதனைக் கருணை ஆறு என்றும் கூறுகிறார்கள். கருணா ஆற்றின் தென் பகுதி யில் (வலப்புறம்) கீழாம்பூர் ஊர் அமைந்துள்ளது. அத்திரி முனி வரிடம் இரண்டு சிஷ்யர்கள் இரு ந்தார்கள். ஒருவன் கங்கையில் குளிக்க முனிவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சென்று விடு கிறான். இன்னொரு சிஷ்யனுக் கு நாம் கங்கையில் குளிக்கத் தருணம் வாய்க்கவில்லையே என்ற கவலை பற்றிக் கொள்கிறது.

அத்திரி முனிவருக்கு சிஷ்யனின் எண்ணம் புரிகிறது. உடனடியாக சிஷ்யனைத் தன் அருகில் அழைத்துத் தன் தண்டத்தால் தரையில் அடிக்கிறார். வடக்கே உள்ள கங்கை நீர் கடனாக வரப் பெற் று ஒரு ஊற்றுக் கிளம்பி நதி யாகப் பிரவாகம் எடுக்கிறது. இந்த நதியில் சிஷ்யன் குளித் து கங்கையில் குளித்த புண் ணியத்தை அடைகிறான். கட னாகப் பெறப்பட்ட நதி நீர் என் பதால் இதனைக் கடனா நதி என்றும் 365 நாட்களும் வற் றாது நீர் எப்போதும் சுரந்து கொண் டிருக்கும் நதி என்பதால் இத னைக் கருணை நதி என்றும் அழை ப்பார்கள். இந்த நதியில் குளித்து பூமி நீளா தேவி சமேத ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகள்
நீங்கும்.

பரிகாரம்

கடன் தொல்லையிலிருந்து விடு பட ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய் தால் கடன் தொல்லை நீங்கும். முன் வைத்த காலுடன் நிற்கும் நீளாதேவியை வேண்டி வழி பட் டால் குபேர யோகம் உண்டாகும். சகலவிதமான வியாதிகளும் வி ஷ சம்பந்தமான நோய்களும் இந்தத் தலத்துக்கு வந்து வழி படுபவ ர்களுக்குத் தானே நீங்கும். கணவன் – மனைவிக்கு இடையே பிண க்கு இருந்தாலோ அல்லது விவாகரத்து வரை செல்லும் வழக் காக இருந்தாலோ இக்கோவிலில் வந்துவழிபட்டால் வேணாட்டு அர சன் ரவிவர்மனுக்கு மனைவியோடு சேரும் பாக்கியம் கிடைத் ததை ப் போன்று பாக்கியங்கள் கிடைக் கும்.

ஸ்தல விருட்சம்

இக்கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வம். வில்வம் தாயாருக்கு உரியது. வில்வ விருட்சம் இருக் கும் இடத்தில் தனலாபம் இருக் கும் என்பார்கள். இப்போதும் கோ விலில் வில்வமரங்கள் காண ப்படுகின்றன.

இடம்

கீழாம்பூர், தென்காசி – அம்பாச முத்தி ரம் பஸ் மார்க்கத்தில் (ரயில் மார்க்க த்திலும்) ஆழ்வார் குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. ஆம் பூர் என்பதுதான் ஊரின் பெயர். வெள்ளைக் காரர்கள் வரி வசூலிப் பதற்காக மேல் ஆம்பூர் கீழ் ஆம்பூர் என்று பிரித்ததாகச் சொல்கிறா ர்கள்.

பஞ்சக் ரோசம்

கங்கா நதிக் கரையில் எவ் வி தம் பஞ்சக் ரோசமுள்ளதோ அ து போல கடனா நதியைச் சுற் றிலும் பஞ்சக் ரோசம் உள் ளது. சிவ சைலம் ஆழ்வார் குறிச்சி, கீழாம்பூர், பிரம்மதே சம், திரு ப்புடை மருதூர் ஆகிய ஊர்கள் பஞ்சக் ரோசம் ஊர்க ளாகும்.

பெருமாள் பெருமாட்டி

கோவில் குடிகொண்டுள்ள பெருமாள் பெயர் ஸ்ரீவெங்கடேச பெரு மாள். பூமி நீளா தேவிகள் பெருமாட்டிகள். நீளா தேவி சிலை (மூல வர்) மூலவர்களின் மற்ற இரு சிலைக ளையும் விடச் சற்று முன் வந்து தென் புறம் சாய்வாகச் சிறிது திரும்பிய வண் ணம் உள்ளது. தெற்கு முகம் என்பது குபேர திக்கு. இங்கு வந்து இந்த நீளா தேவியை வழிபட்டால் குபேர அருள் பெ றலாம். செல்வம் செழித்து ஓங்கும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலகால விஷத் தைச் சிவபெருமான் உண்டார். இதனை ப் பார்வதி தேவிக்குத் தெரிவிக்க உட னே கிளம்பிவிட்டார் நீளா. பெருமாளின் தங்கை பார்வதி என்பது குறிப்பிடத்தக் கது. பார்வதி தேவியார் சிவபெருமானி ன் கழுத்துப் பகுதியைப் பிடிக்க அவர் நீலகண்டரானார் என்பது கதை.

நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால் இக்கோவிலில் ஸ்ரீவெங்டேச பெருமாள், பூமி தேவி சிலையைவிட சற்று முன்னர் மூலவராக நிற்கிறார். இது ஒரு விசித்திரமான ஒன்றாகும். ஆகை யால் இந்த வெங்கடேசப் பெருமாள் கோவில் விசே ஷமானது.

கோவில் அமைப்பு

கருவறை மண்டபத்தில் மூலவர் ஸ்ரீ வெ ங்கடேசப் பெருமாள் பூமி நீளா தேவியு டன் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத் தில் உற்சவ மூர்த்தியாய்க் காட்சி தரு கின்றனர். மணிமண்டபம் இரண்டு மணி களைக் கொண்டதாக உள் ளது. இங்குள்ள வலப்புறம் உள்ள தூணில் யோக நிலையில் ஆஞ் சநேயர் காட்சி தருகிறார். மகா மண்டப த்தில் மூலவரை நோக்கி கருடாழ்வார் எல்லாக் கோவி ல் களிலும் உள்ளதைப் போல் காட்சி தருகிறார்.

மகாமண்டபம்

இடப்புறம் சுவரில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பா பிஷேகம் பற்றிய செய்திகள் உள் ளன. கோவிலைச் சுற்றிய பிரகாரத்தில் பூக்கள் பூத் துக் குலுங்குகின்றன. வில்வமரம் வான் நோக்கி வள ர்ந்துள்ளது. கோவிலின் வலப்புறம் அமைந்துள்ள கிணற்றை ஒட்டிக் கீழ்பகுதியில் நெல்லி மரம் வேப்பமரம் இரண் டும் உள்ளது. இவ்விரண்டு விருட்சங்களுக்கும் பூஜை கார்த்திகை ஞாயிற் றுக்கிழமைகளில் நடப்பதுண்டு. நெல்லி மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டைகளும் இப்போது உண்டாக்கப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்கள்

கோவில் வருஷாபிஷேகம் (கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாள்) வைகாசி மூல நட்சத்திர த்தில் நடைபெற்று வந்தது. கும்பா பிஷேகம் நடைபெறும் நட்சத்திரம் தான் ஸ்வாமியின் நட்சத்திரம் ஆகிறது.

1979 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேகம் ஹஸ்த நட்சத்திரத்தில் வை க்கப்பட்டது. அண்மையில் மீண் டும் 2007 ஆவணியில் கும்பாபிஷேகம் ஹஸ்த நட்சத் திரத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1979ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபி ஷேகம் மூல நட்சத் திரத்தில் அமைந்தது. புரட்டாசி சனிக்கிழமை நான்கு கிழமை களும் மிகச்சிறப்பாக நடைபெறும். முத ல் புரட்டாசி சனிக்கிழமையைத் திரு மங் கலம் சுப்பையரும் இரண்டாம் சனிக் கிழ மையை ஸ்ரீராம கிருஷ்ண சாஸ்திரி கள் குடும்ப வகையறாக்களும் மூன்றாம் சனி க் கிழமையை ரெங்கூன் அப்பாத்துரையும் நடத்தி வந்தனர். நான் காம் சனிக்கிழமை கிராம பொதுவில் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசியின் போது சேஷ வாகனம் பிச்சுவாத்தியார் குடும்பத்தினரால் (மாப்பிள்ளை சங்கரய்யர்) சிறப்பாக வீதி உலா வந்தது உண்டு. மார்கழி முப்பது நாளும் காலையில் திருப்பிட் சையும், லெஷ்மிபதி பஜனை சபாவின் பஜனையும் மாலையி ல் விஷ்ணு சகஸ்ரநாம பாராய ணமும் உண்டு. மார்கழி திரு வோணம் அன்று சிங்கப்பூர் ஐயா வய்யர் கோவிலுக்குச் சிறப்பு வழிபாடு செய்து தேனும் திராட்சை யும் கலந்த நிவேத்தியத்தை பக்தர்க ளுக்கு வழங்குவார். மார்கழி மாதம் கிராமத்தில் உள்ள ஒவ் வொருவரும் சகஸ்ரநாம பூஜைக் கான காலை மற்றும் மாலை நேரத்திற்கான நைவேத் தியத்தையும் வழங்கி வந்தார்கள்.

வாகனங்கள்

கோவிலில் மூன்று வாகனங்கள் உள் ளன. ஒன்று சேஷ வாகனம். தேக்கு மரத்தில் பித்தளை நாகருடன் காட்சி தருகிறது. பிச்சு வாத் தியாரின் முன் னோர்கள் செய்துவைத்த வாகனம் இது. கருட வாகனம் வெண்கல வார் ப்பு. ரங்கூன் அப்பாதுரை ஐய்யர் என்ப வர் குழந்தை பாக்கியம் வேண்டிச் செ ய்து வைத்த வாகனம் என்று சொல்கி றார்கள். சிறியதாக ஒரு கேடயமுள் ளது. இப்போது மடப்ப ள்ளியை ஒட்டி புதிதாக வாகனங்களுக்கு என்று ஒரு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் உற்சவ மூர்த்திகள் மணி பாக வதரின் தகப்பனார் சுப்பை யா ஐய்யர் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் வழிபட்டோர்

குபேரன், இந்திரன், சுதர்சன பாண் டியன், கேளையப்பன் (சிநேக புரியா ன்), ஸுதர்சன பாண்டியன் இந்த சிநே கபுரி என்ற பெயருக்கு இன்னொரு கதையும் உள்ளது. ஸுதர்சன பாண் டியன் இவ்வூரில் வாசம் செய்து குழந் தைப் பேறுவேண்டி அச்வ மேதயாகம் செய் தான். வெங்கடேசப் பெருமாள் கோவில் வந்து யாகத்திற்குத் தேவை யான வழிபாடுகளை செய்து யாகத் தைத் தொடங்கினான். ஜீவராசிகளை, பக்தர்களைச் சோதிக்கும் சிவபெருமான் தன் மகன் ஸுப்ரமண்யரை அனுப்பி மன்னனின் அச்வ மேதயாகக் குதிரை யைக் கட்டச் சொன்னான். குதிரை கட் டப் பட்டிருப்பதைக் கண்ட பாண் டியன் ஸுப்ரமண்யருடன் போரி ட்டு, பின்னர் அருள் பெற்று சிவ சைலநாதரையும் ஸுப்ரமண்ய ரையும் வாயாரப் புகழ்ந்தான். சிநேகமானான். பிள்ளை வரம் சிவ சைல நாதரிடம் பெற்று நேரா க ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோ வில் வந்து தன் பிரார்த்தனைக ளை நிறைவு செய்து கொண்டான். சிவ – வைணவ ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டு. ஸுதர்ஸன பாண்டியன்

சிவசைலநாதரிடம் அருள் பெற் று, பின்னர் தன் பிரார்த்த னைக ளைச் செய்து நிறைவு செய்து கொண்டது பெருமாளி டம். சிவ சைலநாதர் கீழாம்பூர் (சிநேக புரி) வரும்போது சகல விதமா ன மரியாதைகளையும் ஏற்பது ம் வடக்குத் தெரு மற்றும் தெற் குத்தெருவிலுள்ள இரண்டு பெருமாள் கோவில்களில் தான்!

சிநேகபுரி

இவ்வூருடன் தொடர்புடைய ஆலயம் சிவசைலநாதர் ஆலயம். சிவ சைலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமான், அன்னை பரம கல் யாணி யுடன் காட்சி தருகிறார். கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டு எடுக்கப்பட்டு அசரீரீ வாக்குப்படி சிவ சைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஆம் பூர் ஆழ் வார் குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான ஸ்ரீ சிவ சைல நாதர் ஸ்ரீபரமகல்யாணியுடன் மறுவீட்டிற்காகக் கீழாம்பூருக்கு மே

மாதம் வருவதுண்டு.

மூன்று நாட்கள் நடக்கும் வஸந்த உற்சவம். இந்த உற்சவத்தில் முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் களை ப்பு நீங்க இறங்கி நைவேத்தியம் தீபாராதனைகளை ஏற்பதுண்டு. பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோவில் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு இரண்டு நாட்கள் தங்கியிருந்து மூன் றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்று அடைவார், ஊர் மகளான பரமகல்யாணி.

ஆம்பூர் ஆழ்வார் குறிச்சி மக்களிடமிருந்து தினசரி ஊர்ப் பால் சேகரித்த பின்னர்தான் சிவசைலத்தில் உச்சிக்கால பூஜை நடைபெறும். கேளையப்பன் என்பவர் தினசரி பூவையும் பாலை யும் சிவசைலத்திற்கு ஆம்பூரில் இருந்து சிநேகத்துடன்  அனுப்பி வைப்பாராம். சிநேகபுரியான் வந்துவிட்டானா என்று கேட்டுத்தான்
பின்னர் சிவசைலத்தில் பூஜை நடைபெறும் என்று சொல்வார்கள்.

ஊரின் நட்சத்திரம்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. கீழாம்பூரின் நட்சத்திரம் கார்த்திகை. சிவபெருமான் ஸுதர்ஸன பாண்டியனை
அடக்க முருகப் பெருமானை அனுப்பிவைத்ததால் முருகப் பெரு மான் சம்பந்தப்பட்ட நட்சத்திரமே இவ்வூர் நட்சத்திரமானது. சன் யாசி மேட்டிலிருந்து அக்கிரஹாரமாக தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்ட நாள் கார்த்திகை நட்சத்திர நாள் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
– கட்டுரை: கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியன்

தகவல் தொடர்புக்கு:
ஸ்ரீவெங்கடேச பெருமாள் பக்த சபா,
8/12, தெற்கு கிராமம்,
கீழஆம்பூர், திருநெல்வேலி மாவட்டம்.

 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: