திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தைகொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 2009ஆம் ஆண்டு, நவம்பர் 24ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின்கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின்கீழ் கட்டாயம் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலக த்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலக த்தில் பதிவு செய் யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இப்படிவம் சார்பாதிவாளர் அலுவலக த்தில் கிடைக்கும். இணையத்தில்கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண் டும். படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப் படங்களையும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
மேலும் தம்பதியின் வீட்டு விலாசத்துக்கான அத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்க வேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்க வேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கையொப்பம் இட வேண்டும்.
மதகுருமாரைத்தவிர வேறு இருநபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும். மேலும், திரும ணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவி ல்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்பட வில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகி றது) உறுதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.
திருமணங்கள் நடைபெறும் குறிப்பிட்ட சில கோயி ல்களிலேயே கூட, திருமணங்களைப் பதிவு செய்வ தற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கொண்டு சம்மந்த ப்பட்ட சார் பதிவாளரைச் சந்தித்து, உங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!
நல்ல தகவல் நன்றி