Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!

கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், 1980 ஆம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம். எல்.ஏ.,க்கள் பெற்று வந் தனர்.
கடந்த 1981-ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 300 ரூபாயாகவும் உய ர்த்தப்பட்டது. 1982-ல், சம்பளம் 300 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1985-ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985-ல் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயா கவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987-ல், தொலைபேசிப் படி 450 ரூபாயாக உயர்த் தப்பட்டது. இதன்பின், 1989-ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம் பளம் 1750 ரூபாயா க இருந்தது.
இந்நிலையில், 1990-ல் சம்பளம் 1000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாக வும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவு ம் உயர்த்தப்பட்டது. 1991-ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப் பட்டது. கடந்த 1992-ல், தொலைபேசிப் படி 800 ரூபாயக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993-ல், சம்பளம் 1250 ரூபாயாக உயர் த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்ட து. இதன்பின், 1994-ல், சம்பளம் 1500 ரூபா யாகவும், ஈட்டுப்படி 1000 ரூபா யாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்ப ளம் 3950 ஆக உயர்ந்தது.
பின்னர், 1995-ல் சம்பளம், 1700 ரூபாயாகவும், தொகுதிப் படி 400 ரூபாயா கவும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 900 ரூபாயாக வும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1500 ரூபாயா கவும், தொகுதிப்படி 525 ரூபாயாகவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 1250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்ப ளம் 6000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997 -ல் ஈட்டுப்படி, 3500 ரூபாயாக வும், தொகு திப்படி 625 ரூபாயா கவும் உயர்த் தப்பட்டது. தொடர்ந்து, 1998-ல் தொகுதிப்படி 875 ரூபாயா கவும், தபால் படி 875 ரூபாயாக வும், தொலை பேசிப் படி 1750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட து.

இதுவே, 1999-ல் தொலைபேசிப் படி மட் டும் 2750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத் த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2000 ஆம் ஆண் டில், புதிதாக தொகுப்புப்ப டி என்று உருவாக்கப்பட்டு, 2000 ரூபாய் கூடு தலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001-ல், ஈட்டுப்படி, 4000 ரூபாயா கவும், தொகு திப்படி 2000 ரூபாயாகவும், தபால் படி 1500 ரூபாயாகவும், தொலைபே சிப் படி 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின் அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை எம். எல்.ஏ.,க்களி ன் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந் நிலையில், 2006 -ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதி யன்று, ஈட்டுப் படி 6000 ரூபாயகவும், தொகுதிப்படி 4000 ரூபாயாகவும் உயர் த்தப்பட்டு, மொ த்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது.

2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008-ல், 12 ஆண்டுகளுக் குப் பின், சம்பளம் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5000 ரூபாயாகவும், தபால் படி 2500 ரூபாயா கவும், தொலைபேசிப் படி 5000 ரூபாயா கவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயனது.

இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபா யாக உயர்த்தப்பட்டது. 2010 முதல், எம். எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006-ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடி யும் நிலையில், மூன்று மடங்குக்கு மே ல் உயர்த்தப் பட்டது. 

2011ல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது அ.தி.மு.க., இதை யடுத்து 14செப்டம்பர் 2011ல் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில்¢ முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார். அதன் படி, உறுப்பினர்களின் தொகுதிப்படி 5 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, இனி எம்.எல்.ஏ.க் களின் மாத ஊதியம் சம்பளம் 55 ஆயிரமாக இருக்கும் என்றார்.
இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்க ளின் தினப்படியாக 500 ரூபாய், பயணப்படியாக ஏ.சி., இரண்டடு க்கு ரயில் பயணம், அதுவும் ஆண் டுக்கு இரண்டு தவணை களாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பய ணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொ லைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மரு த்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ., க்களுக்கு உண்டு. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: