Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்க‍ம்

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளித்த பதில்:

டாக்டர் கீதா அர்ஜுன் (கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய் வென்பது

அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழு து அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற் காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மரு த்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலள வில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப் பட்டால் ரொ ம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்ன ல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவை ப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத் துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதெ ன்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பால ன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறை கள் எதற்கும் அவசியமில்லை.”

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:

(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)

அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற் கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதி யாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெ ரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என் று அனைவருக்கும் அறி வித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இரு ந்தது. இன்று அப்படியில்லை. பத்திரி கைகள், திருமணப் பதிவு மையங்களி ல் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற் றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். 

அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந் தவர்களாகவும் இருக்கி றார்கள். உட லில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றா ல் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக் குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின் றன. அகாலத்தில் பத்தோடு பதினொன் றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலி ருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப் படாததால் ‘அந்த நேரத்தில்’ மட்டும் ‘தனியாக’ கவனிக்கப் பட்டார்க ள்.

இத்தகைய ‘தனி கவனிப்பு’ இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. என க்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார் கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடி யாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருத யத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அ ந்தக் காலத்தில் பெண் குழந்தை க ளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டா ர்கள். பெண் வயசுக்கு வந்து விட்டா ல் தாவணி போட்டு விடுவார் கள். இப்ப அப்படிச் செய்ய முடியு மா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படி க்கும் பள்ளியில் இத்தகைய பழ க்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக் குமாகி மனதளவில் பாதிப்பை ஏற் படுத்தும். அதுவும் தற்போது பள்ளி களிலெல்லாம் ஒரே விதமான உடைகள்தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண் டிய அவசியமும் ஏற்படுவதில் லை.”

சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியா க உட்கார வைப்பது சரி தான். அப்படி உட் கார இப்போதைய சிறுமிகள் விரும் புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமா னதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற் கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப் பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தை க்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாக வே எல்லாப் பெண்களுக்கும் வருவது தா ன் எனக் கூறி அவர்களது மன அழுத்தத் தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடி க்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செ ய்வதும், தண்ணீரில் மாவிலை கல ந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலை யு ம் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர் களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலு ம்புகளுக்கு வன்மையை அளிக்கி றது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட் டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண் டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச்சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையா க செரிப்பதற்கு காரணமாக அமை கிறது. அரிசியில் எட்டு சதவிகி தம் புரதச்சத்து இருக்கிறது. இந் தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளி தில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறு தியாக்குகிறது. கைக்குத்தல் அரி சியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்ட த்தையும், உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந் தால் இரத்தத்தில் ஹீமோகுளோ பின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வ துடன் வகை வகையாகச்சத்து நி றைந்த உணவுகளைப் ‘பொங்கிப் போடும்’ வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளு ந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொ ண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்த வை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது

மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சி னைக்குத் தான். அவர்கள் வய திற்கு வந்த உடன் பெற்றோர் கள் அவர்களுக்கு சத்தான உண வுப் பொருட்களைக் கொடுப்ப தோடு, குறைந்தது ஒரு வார மாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாத விடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: