Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொட்டுநீர் உரபாசன முறையில் கரும்பு சாகுபடி

கரும்பு பயிரானது மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். நடப்பு காலங்களில் பருவமழை பொய்த்து வருவதால் பெரும்பா லான இடங்களில் நில த்தடி நீரின் அளவு வெ குவாக குறைந்து விட் டது. எனவே, சொட் டுநீர் வழி உர பாசன முறையில் குறைந்த நீர் செலவில் அதிக உர ப்பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல் எடுக்க லாம். எக்டருக்கு 160 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான விளைச் சல் 25-40 விழுக்காடு நீர் சிக்கனத்துடன் நிலத்தடி சொட்டுநீர் உரப் பாசனம் மற்றும் நடவு முறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நடவு முறையில் இது எக்டருக்கு 106 மெட்ரிக் டன்னாக உள்ளது.

நன்மைகள்: முழுமையான இயந்திர அறுவடை, அதிக கரும்பு எடை, அதிக மறுதாம்பு பயிரு க்கு ஏற்றது, 25-40 விழுக்காடு நீர் சிக் கனம், களர் மண் மற்றும் உவர்ப்பு நீர் பகுதிக்கும் ஏற்றது. வேலை ஆட்களின் திறன் மற் றும் எண்ணிக்கை குறைவு. அதி க நிகர லாபம்.

நிலம் தயார் செய்தல்: முதலில் உளிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் சட் டி கலப்பை கொண்டு கட்டி இல்லா மல் உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 12.5 டன் ஆலைக் கழிவுகளை இடவேண்டும். 25 செ. மீ. ஆழமும் 40 செ.மீ. அகலமும், 180 செ.மீ. இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.

விதை கரணைகள் நடவு: குறுகிய கால (7-8 மாத) வயதுடைய விதை கரணைகள் தேர்வு செய்ய வும். கரணைகள் வெட்டுவதற்கு முன் ஏக்கருக்கு 125 கிலோ யூரியா வை ஒவ்வொரு 15 நாட்களின் இடை வெளியில் இடவேண்டும். விதை கரணைகளை ஒரு மீட்டர் நீளத்திற்கு 8 இரு பருகரணைக ளை தேர்வு செய்ய வேண்டும். கர ணைகளை 0.5% கார்பன்டாசிம் க ரைசலில் ஊறவைப்பதன் மூலம் நோய் பரவாமலும் பாதுகாக்க லாம். பக்க குழாய்களை குழிகளின் நடுவே வைத்து லேசாக மண்ணைக் கொண்டு மூடவேண்டும். கர ணைகளை?குழியின் இரண்டு ஓரங்களில் பக்க குழாய்களை நடுவே வைத்து நடவு செய்ய வேண்டும். நடவுக்குப் பின்னர், மண்ணைக் கொண்டு கரணைகளை மூட வேண்டும். பக்க குழாய்களை கரணை களுக்கும் அடியில் 5- 7.5 செ.மீ. ஆழத்தில் பதிக்க வேண்டும்.

சொட்டுநீர் அமைப்பு: நிலத் தடி சொட்டுநீர் உர பாசன மு றைக்கு உட்புறம் சொட்டுவா ன்கள் உள்ள பக்க குழாய்க ளை தேர்வு செய்ய வேண்டும். பக்க குழாய்களை 20-30 செ.மீ. ஆழ த்தில் கரணைகளுக்கு அடியில் சொட்டுவான்கள் மேல்புறம் பார்த் தவாறு அமை க்க வேண்டும். பக்க குழாய்களுக்கு இடையேயான இடைவெளி 180 செ.மீ. இருக்க வேண்டும். நீர் தொட்டிகளுக்கு இடையேயான இடை வெளி 60 செ.மீ. நீர் சொட்டும் திறன் 4 லிட் டர் / மணிக்கு இருக்க வேண்டும். மென்பக்க குழாய்களை உபயோ கிப்பதன்மூலம் முதன் மை செலவை குறைக்கலாம். தகுந்த நீர் வடிகட்டிகள் மற்றும் உரச்செலுத்திகளை பயன்படுத்துவதன் மூலம் நீர்தொட்டிகளில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தொடர்புக்கு:

சு.கிருஷ்ண சாமி, உழவியல் துறை, மதுரை. 

கே.சத்தியபிரபா, உடுமலை. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: