ஆண்களைக் கற்பழிக்கும் பெண்கள் : கற்பை காப்பாற்ற போராடும் ஆண்கள்!!
சிம்பாவேயின் தலைநகர் ஹராரேயில் 3 பெண்கள் ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்த மைக்காகக் கைது செய்யப்பட்டுள்ள னர். இச் சம்பவம் அந்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அதன்போது ஒரு பெண் அவரது முகத்தில் நீரை ஊற்றி விட்டு அவருக்குப் பலமான பாலியல் ஆசையேற்படுத் திய ஏதோ வொரு ஊசியைச் செலுத்திய தாகவும் இதில் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார். அவர்கள் அனைத்தையும் முடித்ததும் தன்னை உடையேது மின்றி நிர்வாணமாகப் பற்றைக்குள் விட்டுச்சென்றதாகவும் கூறி னார்.
அதன்பின்னர் அவ்வழியால் வந்தவர்களால் தான் காப்பாற்றப்பட்டதாக வும் அவர்கள் பொலிஸாரை வரவழைத்துத் தன்னை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினர் . இப்பெண்க ளைக் கைதுசெய்தபோது அவர்களது காரில் 31 பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் காணப் பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களால் சேகரிக்கப்பட்ட விந்துக்கள் வர்த்தகத்தில் வெற்றிகளைப் பெறவேண்டும் என்பதற்காக மத வேண்டுதல்களின் போது பயன்படுத் தப்படுகின்றன எனவும் நம்பப்படு கின்றது.
அத்துடன் இவை நாட்டிற்கு வெளியிலும் விற்பனைக்காகக் கொ ண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இவை எவ்வாறு மத வேண்டுதல்களில் பயன்படுகின்றன என்பது தெரிய வில்லையென்றும் இவ ற்றைச் செய்யும் சமூகங்களி ற்கிடையில் சென்றாலும் செல்பவர்கள் திரும்பி வரு வார்களா என்பது அறியாததால் ஆய்வாளர்களும் அங்கு செல்ல விரும்பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும் இவர்கள் இக்குற்றத்தினை மறுத்ததோடு தாங்கள் விபச்சாரிகள் என்று தெரிவித்தனர். இதுபோன்ற பல சம்பவங்கள் நாடெங்கும் இடம் பெற்றுவருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிடு கின்றனர்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Ramesh
Nerkuppai psychology
Therppththr
Sivasakti. Ds