தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் கால த்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற் கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகா ருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத் திய போது, அதை நாட்டு மக்களு க்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப் போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங் காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன் னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது.
பாக்கு, வாழை மரத் தோர ணங்கள் கட்டப்பட்டன. அன் றையச் செல்வச் செழிப்பிற்கே ற்ப தங்கத்தூண்களில் முத்து மாலைகள் தொங்க விடப் பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய் வங்கள் முதல் சிவன் கோயில் கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை யெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின் பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத் தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண் டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப் பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
போகி பண்டிகை
“போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு. மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயி ப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்ச லுக்கு காரணம் அவரே எ
ன நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத் ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.எனவே இந்நாள், “இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். மழை பெய்தால்தான் பயிர் கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதி யான இந்தி ரனை “போகி’யன்று பூஜி க்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழை யன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது. பொங் கலுக்கு முன் னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலி ட்டுக் கொளுத்துவது வழக்கம்.அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப் பதற்கு முன் அறுவடையாகி ன்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருது வது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும் பாலும் கிராமப்புறங்களில், வாச லிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி
மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்ப தால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார் கள். தீபாவ ளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலு க்கு எப்படியும் புதிய ஆடைக ளையே அணிவார்கள்.
மங்கலப்பொருள்களில் மகா லட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்கிறார்கள். புத்தாடையில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திரு மண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனை முறியாத அரிசி யான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்
களுக்கு மஞ்சள், குங்குமம் கொடு த்து வழி அனு ப்புவதும் மங்கல த்தின் அடை யாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னா ளில் புதுப் பானையில் கட்டி அடுப் பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப் படுத்தி மறுநாள் கா லையில்” மஞ்சள் கீறுதல் ‘ என் னும் சடங்காகச் செய் வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கி னைக் கீறி சிறிய வர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக் கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நா மும் மனம் என்னும் அடுப்பில் இறை சிந்தனை என்னும் நெருப்பேற்றி படர விட்டு, ஆண்டவன் விரு ம்பும் பிரசாதமாக்க வே ண்டும். அரிசியுடன் வெல் லம், நெய், வாசனை தரும் ஏலம்,முந்திரி, உலர் திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல்
இருக்கிறோம். ஆனால் அன்பு , அருள், சாந்தம், கரு ணை போன்ற நல்ல குண ங்களான வெல்லம், நெய், ஏலம், முந்திரி போன்றவற்றை நம் மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப் பில் நம்மை கரைத்துக் கொ ண்டால் பக்குவம் உண்டாகி “பொங்கல்’ போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மை யும் ஏற்றுக் கொள்வான்.
பொங்கலில் முக்கிய இடம் பெறு வது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதி ல்லை. நுனிக்கரும்பு உப்புச் சுவை யுடையது. அடிக் கரும்பு தித்திப் பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப் பின் அருமையை உணர்ந்து செயல் பட்டால், தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனி மையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவு களும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோத
னை கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ் வைச்சுவைக்கமுடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தி யான பொங்கல் பண்டிகையில் கரும் பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப் படியில் கரு ம்புகளை வைத்து அழகுபடுத் துகிறோம்.
பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறு கிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடி த்த தம்பதி யருக்கு கொடுக்கும் பொ ங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?சீர்வரிசையில் கொடு க்கும் கிழங்குகள் அனை த்தும் மண்ணிற்கு அடியில் விளைய க்கூடி யவை. மண் எத்தகைய தன்மையுடையதாக இருந்தா லும், அதை தனது இருப்பிட மாக எடுத்துக்கொண்டு, அங் குள்ள நீர் வளத்தைப் பயன் படுத்தி விளைந்துவிடும். இதைப்போலவே, மணப் பெ ண்ணும் தனது கணவன் வீட் டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனு சரித்துச் செல்ல வேண்டும்.
அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகையை கொடு க்கும் வழக்கம் ஏற்ப ட்டது. சில இடங்களில் உரு ளை, மரச்சீனி, சீனிக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற் றையும் கொடுக்கும் வழக் கம் உள்ளது.
பொங்கலும் பஞ்சபூத வழி பாடும் : பொங்கல் திரு விழாவை பஞ்சபூத வழிபாட் டுக்குரிய நாளாகக் கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். தற்போது வரை கிராம ங்களில் மண்பானையிலேயே பொங்க லிடுகின்றனர். இந்தப் பானை பூமியில் இருந்து களிமண்ணால் செய்யப்படுகி றது. பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசி யைக் கொதிக்க வைக்கிறோம். நெரு ப்பு எரிவதற்கு காரணமாக காற்று இருக்கிறது. வெட்டவெளியில் பொங் கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண் டலத்துக்கு நன்மை யையே செய்கிறது. இதன்படி பஞ்ச பூதங்களை வழிபடும் வைபவமாக பொங்கல் அமைந்துள்ளது.