Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ள கமல்

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற் போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார். ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங் கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். கமலே இயக்கி, நடி த்து தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தன்னு  டைய அடுத்தபடத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து ள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல். தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத் திற்கு “அமர் ஹெயின்” என்று பெயர் வைத்துள்ளார். 

இதுகுறித்து கமல் கூறுகையில், இந்த படத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட் டேன். ஆனால் அப் போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப் பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்து ள்ளது. விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்க வுள்ளேன் என்று கூறியுள்ளார். 

இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித் துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளி யிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: