கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் “”சொக் கட்டான்”” விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று
எழுந்து அவனை நோக்கி ஓட,
விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், “எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?” என்று சொன் னபடி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.
அடுத்த கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் பயந்து போனாள்.
இந்தக் காட்சி
யை கண்ட துரியோதனன் என்ன சொன்னான் தெரி யுமா? எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் எப்படி, நீங்க ளே வீடியோவை பாருங்க, கேளுங்க.
நட்பின் இலக்கணம் துரியோதனன்
என்ன கவர்ந்த கதாபாத்திரம்
வீடியோவில் ஐந்தாவது நிமிடத்தில் மேற்காணும் காட்சி இடம் பெற்றுள்ளது தவறாமல் காணுங்கள்
கூடுதல் தகவல் – எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த கர்ணன் திரைப் படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் தெரியுமா? கிட்ட தட்ட 500 முறைக்கு மேல், ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ புதியதாய் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு மேலிட்டதே தவிர, ஒரு நாளும் சளிக்கவில்லை.
கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி இது
By
Vidhai2virutcham
over acting sivaji but Mr bandhulu dirction is good
I like karnan the vedio clip 5th mint Sean real true friendship .understand the relationship