பிறர் செய்யும் செயல்கள் அங்கீ காரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வ தற்கு சற்று யோசிக்கதான் செய்கி றோம்.
இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என் ற நினைவு அல்லது பார்த்துக் கொ ண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல் லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.
அட! நமது விருப்பு-வெறுப்பு களை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரிய மான உண்மை. இதற்கு பெரிய உதாரணமெல் லாம் தேவையில்லை.
கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அ து நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா… நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்ப தை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்தி லே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.
பாருங்கள்… சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வச திகளைவிட இந்த உலகத்தி ற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏ னைய முக்கிய விசயங்கள் குறி த்து என்ன சொல்வது..?
இப்படியான நம் மன நிலைக் கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல் லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடி வுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம் மை ஆட்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை. முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன் றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந் தெடுத்துக்கொள்ள!
மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடு க்கும்.
நம்மை பொருத்தவரை இவை மா றி மாறி வரும் ஒரு செய்தி அவ்வ ளவே! நம்மால் முடிந்தவரை எதை யும் செய்வது போதுமானது. ஏனெ னில் இறுதி வரை நம்மால் வெற்றி யை மட்டுமே தக்க வைத்துக்கொள் ளவும் முடியாது. அப்படி வைத்திரு ந்தால் வெற்றி என் பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இ தை தெளிவாய் உணர்ந்தால் போலி யான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
Reblogged this on Gr8fullsoul.