பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்க
ளை அவ்வப்பொழுது http://taluk. tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள். மாற்றம் ஏதும் இருப்பின், உடனடிகவனம் தே வை .
சில பேர் , பட்டாவை வாங்கி பார் த்தால், அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல் லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .
வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது. ஆனா ல் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும் பொழுது உங் கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற் பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
வில்லங்க சான்றிதழ் எனப் படுவது உங்கள் நிலம் யா ரால் யாருக் கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என் று அத்தனை விவரங் களும் உள்ளடக்கியதாக இருக்கும். உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு, உங்கள் பத்திர பதிவு நாளுக் கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத் தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப் படவேண்டும் எனில் உங்கள் தந்தை யாரின் இறப்பு சான்றிதழ் மற்
றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெய ருக்கு மாற்றம் செய்யலாம் .
கூடிய மட்டும் உங்களின் நிலங்க ளை வேலி அடைத்து பாதுகாப்ப து நல்லது .
உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத் தகத்தில் தொகுத்து வைத்து இரு ந்தால், அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்ப தற்கு நலமாக இருக்கும் . சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங் கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் .
காசுகொடுத்து வாங்குகிறீர்கள்…. கொஞ்சம் கவனிக்கலாம் தானே!
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்