Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசும் பெண்களைத்தான் . . .

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியா து. அந்த அளவுக்கு கணவன், மனை வி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக் கைச் சிந்தாத மனைவிகளைப் பார் க்காமல் இருக்க முடியாது. மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகி றார்கள் என்பது ஆண்கள் பொதுவா க வைக்கும் புகாராகவும் உள்ளது.
 
சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண் கள் வெறுக்கிறார்களாம். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார் கள் என்றும் எரிச்சல்படுகிறா ர்களாம்.

மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கர்ச்சீப்பும் கையுமாக கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் புலம்ப லாக உள்ளது. பெண்கள் அழும்போது ஆண்கள் சந்திக்கும் அவஸ்தைகளாக இதைக் கூறுகிறார்கள்…

ஒரு பெண் அழத் தொடங்கி விட்டா ல்,ஆண்களுக்குகையும் ஓடுவதில் லையாம், காலும் ஓடுவதில்லையாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவ ர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம்,

அவர்கள் கோருவதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக் கிறதாம். பொது இடங்களுக்கு, கடை போன்றவற்றுக்குச் செல்லும் போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்கு கிறார்களாம்.

அப்போது ஆண்களுக்கு பெரும் தர்ம சங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத் தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவானாம். எனவே இதைப் பயன் படுத்தி பல பெண்கள் கண்க ளை கசக்கியோ அல்லது கசக் குவது போல நடித்தோ காரிய த்தை சாதித்துக் கொள்கிறார்க ளாம். இது போன்ற சம்பவங் களில் ஆண்களுக்கு செம டென் ஷனாகி விடு கிறதாம்.

இருந்தாலும் பொறுத்துக் கொ ண்டு, சரி சரி அழாதே, வாங்கித் தர்றேன் என்று பல்லைக் கடித் தபடி கூறி அமைதிப்படுத்துகிறார்களாம். சாதாரண பிரச்சினைக ளைக் கூட பெரிய ரேஞ்சுக்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்கி றார்கள் பெண்கள் என்பது பல ஆண்களின் புகாராக உள்ளதா ம்.

ஒண்ணுமே இல்லாத பிரச்சி னையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறாங்க என்கிறார்கள் அவர்கள். அதாவது சும்மா கே ட்டால் கிடைக்காது என்று கரு தும் விஷயத்தை கண்ணீர் கல ந்து கேட்கிறார்களாம் பெண்க ள். இதையும் பல ஆண்கள் விரும்புவதில்லையாம்.

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கு ம் பெண்களைத்தான் ஆண்க ளுக்குப் பிடிக்கிறதாம். மற்ற படி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்க ளை ஆண்கள் வெறுக்கிறார் களாம். உங்க கேஸ் எப்படி …?

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: