Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்லப்பிராணி வளர்ப்பது எப்படி ? – கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்.

”ஒருசில கவனக்குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப் பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதை ந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிச யங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளை களின் மன அழுத்த நெருக்கடிக்கு செல் லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப் படத் தேவையில்லை. ஆனால், செல்ல ப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான அனைத்தையும் முறைப்படி செய்யத் தவறக்கூடாது.

புதிதாக நாய் வாங்கி வந்தால், சின்னச்சின்ன கட்டளைகளுக்கு உட ன்பட வைப்பது, நாய்க்குப் பிடித்தது… பிடிக்காதது போன்றவற்றை அறிந்து கொள்வது என பெரியவர்கள் ஓரளவுக்கு பழக்கிய பிறகே, பிள்ளைகளிடம் பழகவிட வே ண்டும். எந்த நேரத்தில் நாயின் அருகில் செல்லலாம், செல்லக் கூடாது; நாயானது, இறைச்சி யை உண்ணும்போதோ, குரை க்கும்போதோ அதன் அருகில் செல்லக் கூடாது; நாய் விரட் டினால் ஓடக்கூடாது; கையில் உணவை வைத்துக்கொண்டு அதற்குக் கொடுக்காமல் போக் குக் காட்டக் கூடாது… என்பது போன்ற அறிவுரைகளையும் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டு ம். உங்கள் வீட்டுக் குழந்தை, பிராணியுடன் நன்றாகப் பரிச்சயமா கி விளையாடுகிறது என்பதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளைகளி டமும் எடுத்த எடுப்பில் நாயை அனுமதிக்கூடாது. வாந்தி, வயிற்று ப் போக்கு, சரியாகச் சாப்பிடாமல் துவ ண்டு போய் முடங்குவது போன்றவை பிராணிகளின் சுகவீனத்துக்கான ஆரம்ப கட்ட அறிகு றிகள். இவை தென்பட்டா ல்… நாயைத் தனிமைப்படுத்தி உடனடி யாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண் டும். இது போன்ற சமயங்களில் நாயின் வயிற்றிலிருக்கும் கொக்கிப்புழு, உருண் டைப் புழு போன்றவற்றின் முட்டைகள் அதன் கழிவில் அதிகம் வெளிப்பட்டு வீட் டில் உள்ளவர்களைத் தொற்ற வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை.

ஆரோக்கியமாக இருக்கும் நாயானாலும் கூட, அதனுடன் விளை யாடி முடித்ததும் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். செல்லப் பிரா ணியின் உடலில் ரோமங்கள் அதிகம் இருப்பின், அதனுடன் அந் யோன்யமாக விளையாடிய குழந்தைகள், வேறு உடைகளை மாற் றிக் கொண்ட பிறகு சாப்பிடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய அனுமதிக்கலாம்.

நாய் பிறந்த ஒன்றரை மாதத்தில் தடுப்பூசி தற்காப்பைத் துவக்கி விட வேண்டும். எலிக்காய்ச்சல் பாதி ப்பு, வலிப்பு நோய், ஹெபா டைட்டிஸ் போன்ற நோய்களைத் தவிர்ப்பதற் கான கலவை மருந் துகளின் தடுப்பூசி இந்தச் சமயத்தில் போடவேண்டும். மூன்றாவது மாதத்தில் ரேபீஸ் தடுப் பூசி போடுவதோடு, டாக்டரின் ஆலோ சனையின் கீழ் வருடம் ஒருமுறை இதைத் தொடரவேண்டும். குட்டிநாய் களுக்கு மாதம் ஒரு முறையும், ஒரு வயதுக்கு மேற்பட்ட நாய்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையு மாக குடற்புழு நீக்கம் செய்ய வேண் டும்.

வெளித்தள்ளிய நாக்கோடு எச்சில் ஒழுகுவது, சாப்பிடாமலிருப் பது, தண்ணீர் அருந்தாமலிருப்பது, அருகில் யாரையும் அனுமதிக் காமலிருப்பது போன் றவை இருந்தால்… ரேபீஸ் எச்சரிக்கை அவ சியம். உடனடியாக நாயைத் தனிமைப்படுத்தி டாக்டரை அழைக்க வேண்டும். ரேபீஸ் பாதிப்புள்ள நாய், எவரையேனும் கடித்து விட்டால்… காலம்தாழ்த்தாது டாக்டரைப் பார்க்கவெண்டும். ‘வெறி நாய் கடித் துவிட்டால், தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்களே’ என்கிற அச்சமெல்லாம் தேவையில் லை. இப்போது, சாதாரண ஊசிகளை கைகளில் போடுவது போலவே… சுமார் ஆறு ஊசிகளை, வெவ் வேறு தினங்களில் (0 மற்றும் 3, 7, 14, 28, 90 தினங் கள்) தவறாது போட்டுக்கொள்ள வேண்டும். ரேபீஸ் பாதிப்புக்கான அறிகுறியுள்ள நாய், ஒருவரை கடித்தா ல் அதைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய் து, சுமாராக 10 தினங்களில் அந்த நாய் இறந்து போனால் அதற்கு வைரஸ் வீரியம் அதிகம் என்ற எச்சரிக்கை  யோடு கடிபட்டவர் கவ னமாக சிகிச்சையைப் பின் பற்ற வேண்டும். ரேபீஸ் பாதிப்புள்ள நாய், இன்னொ ரு நாயைக் கடித்திருப் பினும், இதே ரீதியிலான சிகிச்சை தேவை.

ஒரு வயதுக்கு மேற்பட்ட நாய், பருவமெய்தியதன் அறிகுறியாக வீட்டுக்குள் தங்காது, இணை தேடி வெளியில் பாயும். குட்டி நாய் வேண்டுபவர் கள், தங்கள் நாய்க்கான ஆரோக்கிய இணையை அறிந்து கலக்க விட லாம். அல்லது மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆண்மை நீக்கம் அல்லது கருப்பை நீக்கம் செய்துவிடலாம். ஒரு வயதுக்கு முன்பாக இவற்றை மேற்கொண்டால்… பிராணியின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அதிக வயதான நாய்கள், நோய் க்கு அதிகம் இலக்காகும் என்பதால்… குழந்தைகள் உள்ள வீடுகளில் அவற் றைத் தவிர்ப்பதே நல்லது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: