
மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடி யும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத் திலிருந்தே இரும்பை க் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்த த்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன் னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல் லது காந்தப் புலம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையைச் செலு த்துகிறது.
மின்சாரத்துக்கும்,காந்தத்துக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்த விஞ்ஞானிகள், இவற்றை இணைத்தே பேசுகிறார்கள். மின்காந்தப்
புலம், மின்காந்த விசை என்றே இவற்றைக் குறிப்பி டுகிறார்கள். இந்த மின் காந் தப் புலத்தில் பரவும் ஆற்றல், அலை வடிவம் உடையதாக இருக்கும். நாம் கண்ணால் பார்க்கும் ஒளியே (சிவப்பு, நீலம்) இந்த மின்காந்த அலைகள்தான். இப்படிப்பட் ட அலைகள் (ஒளியும் சேர்த் து) அனைத்தும் வெற்றிடத்தில் மிக மிக வேகமாகச் செல்லக் கூடி யவை. இவற்றின் வேகம் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர். நீங் கள் ‘ம்’ என்று சொல்வதற்குள் இந்த மின்காந்த அலைகள் 3 லட்சம் கிலோமீட்டர் சென்றிருக்கும்!

ஆனால், இதைவிடக் குறை வான அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால், ஒளி யால் ஊடுருவ முடியாத இட ங்களையும் ஊடுருவ முடியும். பண்பலை (எஃப்.எம்) வானொலி அலைகள் அப்படிப் பட்டவை. 85 மெஹா ஹெர்ட்ஸ் முதல் 110 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அலைகளில்தான் பண்பலை வானொலிச் சேவை வழங்கப்படுகிறது. இந்த முழு ரேஞ்ச், அதா வது 110-85 வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்தப் பகுதியை எஃப்.எம். ஸ்பெக்ட்ரம், அதாவது பண்பலை பர
வல் என்கிறார்கள். இந்த அலைப் பர வலுக்கு வெளியே பண்பலை வா னொலி நிகழ்ச்சிகளைத் தரமுடி யாது.
அதேபோல, செல்பேசிச் சேவை யை எடுத்துக்கொண்டால், சாதார ணக் குரல் வழிச் சேவையான 2ஜி (2G- என்றால் 2nd Generation- இர ண்டாம் தலைமுறை) என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 ஹெர்ட்ஸ் என்ற 170 அலைப் பரவ லில்தான் தரமுடியும். அதேபோல குரல், டேட்டா, வீடியோ ஆகிய வற்றை எடுத்துச் செல் லக்கூடிய 3ஜி சேவைகளை 1920 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2170 மெகா ஹெர்ட்ஸ் என்ற அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும்.
அலைப்பரவலின் அகலம் குறைவாக இருப்பதால் அதைக் கொஞ் சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும். சான்றாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதைப் பத்துப் பேர் பகிர்ந்து கொள்கிறார்க ள். அப்போது, தலைக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைக் கும். அதையே 100 பேர் பகிர்ந்து கொண்டால் 0.1 ஏக்கர் நிலம்தான் கிடைக்கும். நிலத்தைப் போலவேதான் ஸ்பெ க்ட்ரமும்! (அதனால் தான் இத்தனை போட்டியும், முறைகேடு களும்!)
ஸ்பெக்ட்ரத்தைப் பகிர்ந்து கொள் வதில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. சான்றாக, எஃப்.எம் . வானொலியை எடுத்துக் கொண் டால், ஒரு வானொலி நிலையத் துக்கும் மற்றொன்றுக்கும் இடை யில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடை வெளி இருக்கவேண்டும். அப்போ துதான் இரு நிலையங்களின் நிகழ் ச்சிகளும் ஒன்றோடு ஒன்று குழ ம்பாமல் நம்மை வந்தடையும். ஆக, மொத்தம் உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் என்பதை 0.8 கொண்ட இடை வெளிகளாகப் பிரித்தால், சுமார் 30 நிலையங்கள்தான் ஒரு குறிப்பிட்ட ஊரில் சாத்தியம்.
அதேபோல, 2ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 10 சேவை நிறுவனங்கள்தான் 1800 மெகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண்ணை ஒட்டி இருக்கமுடியும்.
3ஜி சேவையை எடுத்துக் கொ ண்டால் 7-8 பேர்தான் இருக்க லாம். இதன் காரணமாக ஸ்பெ க்ட்ரத்தைப் பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். இன்னும் சிறப்பான தொழில் நுட்பங்கள் தோன்றத் தோன்ற, குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரத்தை, அதிகம் பேர் பயன்படுத்தும் நிலை நாளை ஏற்படலாம். அல்லது மேலே சொன்ன அதிர் வெண்கள் தாண்டி, பிற அதிர்வெண் பரவல்களை யும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் வரலாம். அதுவரை பற்றாக் குறை இருக்கவே செய்யும்.
நன்றி: புதிய தலைமுறை-