உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate) ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்
ப டி தூய்மையாக வைத்துக்கொ ள்வது என்பதை உலகிற்கு கற்று கொடுத்தவர்கள் இந்தி யர்கள் என்றால் மிகையில் லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய் யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம் , நம் உடலை தூய்மையாக வைத் துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகு தான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும் அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக் கொ
ள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல் லா முயற்சிகளுக்கும் அடிப்ப டையான செயலாக அமைகிறது என்றால் மிகை யில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக் கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோ ன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களி டம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலா று.
கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளு க்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் (Indus Valley Civilization, 3300 BCE – 300 BCE) வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம்
இருந்ததாக அறியப்படு கிறது. ஆரம்பத்தில் குருமண லை (Sand Powder) பல் துலக்கு வதற்க்காக பயன்படுத்திய இவ ர்கள் போகப்போக எரிந்த மரங் களின் சாம்பலை விரலால் தொ ட்டு பல் துலக்க ஆரம்பித்தனர். கெளதம புத்தர் (Gautama Buddha, 563 BCE – 483 BCE) வாழ்ந்த காலத்தில் வேப்பமர குச்சிகளை (Neem-Trees Twigs ) பல் துலக்க பயன்படுத்தும் அள விற்கு சிந்து சமவெளி மக்கள் நாக ரீகத்தில் வளர்ச்சியடைந்திருந் தனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. சுருக்கமாக சொன்னால் கிட்ட த்தட்ட 3000 (1000 BCE) ஆண்டுகளு
க்கு முன்பே தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களி டம் இருந் திருக்கிறது.
பின்பு கி.மு ஐந்தாம் நூற் றாண்டு (500 BCE) வாக் கில் சில வணிக ர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீன (China) மற்றும் எகிப்திய (Egypt) மக்களை எட்டியது. சில நூற் றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றா டம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல
என்பதை விரை விலேயே அறிந்துகொண்டன ர். இதைத் தொடர்ந்து பல் துல க்க தனியாக பொடி தயாரிக் கும் பணியில் மும்முறமாக இறங்கினார்கள் எகிப்தியர் கள். பல்வேறு கட்ட ஆய்வுகளு க்கு பிறகு, உப்பு (Salt), புதினா இலை (Mint Leafs), ஐரிஸ் மலர் (Iris Flower), மிளகு (Pepper) ஆகி யவற்றுடன் இரு பது வகை தானியங்களை சேர்த்து பொடியாக்கி கி. பி நான்காம் நூற் றாண்டில் (400 AD) வாக்கில் உலகின் முதல் பற்பொடியை (Tooth powder) தயாரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர் எகிப்தியர்கள்.

ராஜ வம்சத்தினர் மட்டும் பயன்ப டுத்திய இந்த பற்பொடியின் தயா ரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டு அவ ற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் (Austr ia) தலைநகர் வியன்னாவில் (Vienna) உள்ள அருங்காட்சியகத் தில் (Museum) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எல்லோ ரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற் பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்கு கிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த
பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்ப டையாகக் கொண்டு பெர்சியா வை சேர்ந்த இஸ்லாமிய பல் துறை (Polymath) வல்லுன ரான ஷிர்யாப் (Zir yab, 789 AD) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD) புதிய முறையில் அதிகளவில் பற் பொடி தயாரி க்கும் முறையை கண்டறிந் தார்.
ஷிர்யாப் தனது பற்பொடியை தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதி
வரை அவர் என்னென்ன பொருட்க ளை பயன்படுத்தி அந்த பற்பொடி யை தயாரித்தார் என்பது வெளியு லகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணமிக் கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொ டியைப்போல பல் துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தவறவி ல்லை. உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொ ள்ளப்பட்ட இவரது பற்பொடி அக் காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பா லான நாடுகளில் வாழ்ந்த மக்களின் பிரதான பற்பொடியாக இருந் தது சாம்பல் தான் என்றால் மிகையில்லை. பற்பொடி தயாரிக்கும்
தொழிலும் குடிசை தொழி லாகவே மேற் கொள்ளப்பட் டதால் பற்பொடி எல்லை கட ந்து ஏற்றுமதி மற்றும் இறக்கு மதியாகும் வாய்ப்பை பெற வில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பா லான நாடுகளில் சாம்பல் தான் பிரதான பற்பொடியாக இருந்து வந்தது. இதில் ஆச்ச ரியமான மற்றுமொறு உண்மை என்னவென் றால் கி.பி.18 ஆம் நூற் றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெ ரிக்க நாட்டு மக்களிடை யே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை என்பதுதான். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான்.
நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 – 1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்க
ளை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி (Colgate & Company, Founded in 1806, presently as Colgate-Palmolive) பற்பொடியின் முக்கியத்துவத் தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வுசெய்து இறு தியில் உப்பு (Salt), படிகாரம் (Alum), சுண்ணாம்பு (Chalk) ஆகிய வற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ (Colgate Tooth powder) என்ற பெயரில் குடுவைகளில் (Jar) அடைத்து விற்பனை
செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடி சை தொழிலாக இருந்து வந்த பற்பொடி தயாரிக் கும் தொழில், அதன் பிற கு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக் கால கட்டங்களில் தான் அமெரிக்க மற்றும் இங் கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக் கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலே
யே மனிதர்களில் சில பக்க விளைவுக ளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்ப லை நோக்கி திரும் பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக வாஷி ங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என் ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாக கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளை (Calcium Fluoride) கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில் நுட்பம் ஒன்றை 1892 ஆம் ஆண்டு கண் டறிந்தார். தொடர்ந்து பற்பசையை அடை த்து விற்ப்பதற்க்காக மடக்கு குழாய்க ளை (collapsible tube) தயாரிக்கும் தொழில் நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்
நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பற்பசை (Tooth paste) தயாரி த்து மடக்கு குழாய்களில் அடைத்து கோ ல்கேட் டூத் பேஸ்ட் (Colgate Tooth paste) என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பி த்தது.
கி.மு-வில் பிறந்தவர்களுக்கே பக்க ம் பக்கமாக தகவல் வைத்திருக்கும் விக்கிபீடியா, 1900-களில் வாழ்ந்த ஷெப்பில்டு பற்றி முக்கியமாக உல கின் முதல் நவீன பற்பசையை தயாரி த்த இவரை பற்றி ரெண்டே வரிகளில் தகவல் வைத்திருக்கும் ஆச்சி ரியத்தை பார்த்தால் அவரைப்பற்றிய தகவல்களை வேண்டுமென் றே இருட்டடிப்பு செய்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகி
றது. இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப் பில்டு தயாரித்த அதே தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொ ண்டு தான் பற்பசையும், பற்பசை யை அடைத்து விற்க பயன்ப டுத்தும் மடக்குகுழாய்களும் உற் பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோ ரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமரிக்க பல் சங்கம் (American Dental Association, known as ADA) தடை செய்ய
முன்வந்தது. பெறும் சர்ச்சைகளுக் கு உள்ளான இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு வில்லியம் ப்ரோ க்டர் (William Procter, 1801 – 1884) மற்றும் ஜேம்ஸ் கேம்பல் (James Gamble, 1803 – 1891) என்ற இரு அமெரிக்கர்களால் 1837 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பொருட்க ளை விற்பனை செய்து வந்த ப்ரோக் டர் & கேம்பல் (Procter & Gamble, Founded at USA in 1837, known as P&G) என்ற நிருவனம் ஜோசப் முஹ்லர் (Dr. Joseph Muhler) என்பவரை தலைமையாக மருத்து வக்குழு ஒன்றை அமை த்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொ ண்ட இக்குழு 1955 ஆம் ஆண்டு வாக்கில் புளோரைடு பற்பசைகளின்
நம்பகத்தன்மை மற்றும் பின் விளை வுகள் பற்றிய தங்களது விரிவான அறிக்கையை அமெரிக்க பல் சங்கத் திடம் (ADA) சமர்பித்தது. அறிக்கை யை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற் பசைகளு க்கு சில கட்டுப்பாடுகளுடன் அனும தியளித்தது, அதாவது பெரியவர்கள் உப யோகிக்கும் பற்பசையில் புளோ ரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறி யவர்கள் உபயோகிக்கும் பற்பசை யில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வே ண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கி யது.
thanks to varalatrusuvatugal