குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் இந்தி யாவில் பெண்களுக்குத்தான் முதலிடம். 100க்கு 1 என்ற விகிதத்தில் கூட ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன் வருவதில்லை.
இது ஒருபுறமிருக்க, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்து ள்ளது.
தற்போது உடல் எடை உயர்வு ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், வீட்டு வே லைகளை செய்ய இயந்தி ரங்கள் வந்ததும், உணவுப் பழக்கமும் காரணங்களாக இருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச் சையும் முக்கியக் காரணம் என்கிறது மருத்துவம்.
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகி ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்ப டுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹா ர் மோன் சரியாக சுரக்காது. இது தான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக் கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்’ என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப் படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச் சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகி றது.
குடும்பப் பெண்கள் பலரும், குழந்தையு ம், கணவரும் மீதம் வை த்த உணவையும், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைக ளை செய்ய இயந்திரங்கள் இருப்பது ம், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங் கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.
எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வே ண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுக ளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வே ண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச் சத் துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறி கள், பழங்கள், கீரை களை அடிக்கடி உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோ மீட் டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர் ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.
சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப் படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடி யாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்த க் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மரு த்துவர்கள்.
சில பெண்கள் பரிசோத னை செய்து கொள்ளாம லேயே காப்பர்-டி பொ ருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதி கமாகி அவதிப்படுகின்றன ர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறி ப்பாக ரத்தம் எளி தில் உறைதல், வெள் ளைப்படுதல், அதிக ரத்தப் போக்கு போன் ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப் பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படு த்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய் ப்புண்டு.
நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சே ராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோ ஜன் ஹார் மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அத ற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும்.
நன்றி – இளமை (அமிர்தா)
Usful advice