சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம் ப கட்டத்திலேயே உணவில் அ திக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத் து சக்கரையின் அளவை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
நாம் உண்ணும் உணவு என்பது மாவு ச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். அரிசி, கோ துமை ஆகிய வற்றில் மாவுச் சத்து அதிகம் இருந்தாலும் கோது மை மற்றும் தவிடு நீக் காத அரி சியில் அதிக அளவு உள்ள நார்சத்து (fibre content) சக்க ரையின் அளவு இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனா ல் நீரிழி வு நோயின் தாக்கம் குறைகிறது.
சாப்பிட வேண்டியவை
வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்கா யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வர கு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட் டனில் கண்டு பிடித் துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நா லைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடு த்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.
வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் – 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக் குள் வைத்திருக்கலாம்.
ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரை யினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின் றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையி னை ஆற்றலாகச் செலவிடும் திறனை அதி கரிக்கின்றது
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதா ல் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள் ளார்கள். பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடைய வர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத் துக் கொள்ளலாம்.
மேலும் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவர ங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், பலாக் காய், காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்
டுப்படும்
சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம்.
அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ், தக்காளி சூப், சோடா.
சாப்பிடக்கூடாதவை:
வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு , காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமி
க்கு கீழே விளைவதையும் தவிர்க் க வேண்டும்
சாப்பிடக்கூடாத பழங்கள்: பேரீச்ச ம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகை கள், பெரிய ஆப்பிள், பெரிய மாம் பழம், பெரிய கொய்யாப் பழம், சப் போட்டா., சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அருந்தக் கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலிய வை.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Ok