திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக் கிய நிகழ்ச்சி, காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந் த பெற்றோர்கள் என நாடு முழுவ தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி.
செய்தி வாசிப்பாளராக வணக்கம் என்று ஆரம்பித்து இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச் சியின் ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கிறார் நிர்மலா பெரிய சாமி. இந்நிகழ்ச்சி உருவான விதம் பற்றியும், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றியும் நம்மிடை யே பகிர்ந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு மொழிகளில் ஜி’டிவியில் முன்பே வந்துகொண்டுதான் இருந்த து. தமிழிலும் எடுக்கலாம் என்று யோசித்த போது அந்த நிறுவனத்தில் வேலை செய் து கொண்டிருந்த என்தோழி , “நிர்மலாவைப் போடலாம்’ என்று சொல்லியிருக்கிறா ள். அப்படித்தான் இந்த நிகழ் ச்சிக்கு நான் வந்தேன்.
சிலர் இதை கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள். அப் படி எதுவும் இல்லை. சொல்வதெல்லாம்’ உண்மை நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் பிரச்னையோடு வருகிறவர்களை அக்கறையா க, அன்பாக அணுகுகிறேன். என் வீட்டிற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் நான் எப்படி நடந்து கொள்வே னோ அதுபோலத்தான் இந் த நிகழ்ச்சியை ஆர்த்தமார் த்தமாக செய்கிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு கவுன்ஸிங் மாதிரிதான். ஒரு மன ஆறு தலுக்கான விஷயம். குறை ந்தபட்ச தீர்வுக்கான அல்ல து பிரச்னையை முளையி லேயே கிள்ளி யெறிவதற்கானது. இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொன்னால் எப்படி?
நிறைய பேர் போன் பண்ணுவார்கள். சிலர் நேரடியாக நிறுவனத்துக் கே வந்து பிரச்னையைச் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கென்று ஒரு பெரிய குழு வே இருக்கிறது. அவர்கள் பிரச் னையி ன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து நிகழ்ச்சி க்கு கொண்டு வருவார்கள். ஆனால் எனக்கு நிகழ்ச்சியில் உட்காரும் வரை இது தான் பிர ச்னை என்றோ.. இவர்தான் பிரச் னைக்குரியவர் என்றோ எதுவு மே தெரியாது. ரொம்ப கெட்டவ ர்கள்கூட இங்கே வந்தவுடன் அடங்கித்தான் போகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நிறையபேர் பாராட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியால டிஆர்பி ரே ட்டிங் ஏறியிருக்கிறது. பார்க்கிற இடத்தில் எல்லாம் என்னை ரொம்ப பெரிய மனுஷியாக மக்கள் பேசுகிறார் கள். மற்ற டிவி நிகழ்ச்சிகளைவிட இது மாறுபட்டதாக இருக்கிறது. பிரச்னைக்குரிய மனிதர்களை அணுகி அவர்களுக்குத் தீர்வு தருகி றோம் என்பது எவ்வளவு பெரிய பணி? இது எனக்கு மிகப்பெரிய மன திருப்தியைத் தருகிறது.
பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைக்கும் போது அவர்கள் காட்டும் நன்றிக் கு ஈடாக எதையும் சொல் ல முடி யாது.
கொலைகேஸ் கண்டுபிடி க்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி.
பார்க்கிறவங்களும் “இது மாதிரியெல்லாம் பண்றீங் களே “பயமா இல்லையா?’ என்பார்கள். அவர்களும்
மனிதர்கள்தானே.. அவர்களை அன்பாகவும், அரவணைப்பாகவும் அ ணுகினால் போதும் என்று நினைக்கிறேன். இதுவரை அப்படித்தான் செய்து வருகிறேன்.
மக்கள் பிரச்னையைக் கையி லெடுக்கும் சமூக நிகழ்ச்சிகள் தொ லைக்காட்சியில் நிறைய வரவேண்டும். மக்களும் அழு கைத்தொடர்களை விட்டு வெ ளியே வந்து இதுபோன்ற நிகழ் ச்சிகளுக்கு ஆதரவு தரவேண் டும் என்று அன்போடு கட்டளை இட்டார் நிர்மலா பெரியசாமி.