ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் “தாண்டவ ம்” படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்டஈடு வழங் காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் டில் பொன் னுசாமி எனும் உதவி இயக்கு நர் போட்டிருந்த வழக்கு ஒரு வழியாக தள்ளுபடி செய்யப்ப ட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28)ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தடைபல கடந்து தமிழில் திட்டமிட் டபடி ரிலீஸ் ஆகும் “தாண்டவம்” தெலுங்கிலும் “சிவ தாண்டவம்” எனும்பெயரில் ரிலீஸ் ஆக இருந்தது!
தெலுங்கு தாண்டவத்தை தற்போதைய பிலிம் சேம்பர் தலைவர் கல் யாண், தனது தேஜா சினிமாஸ் பட நிறுவனம் மூலம் ரூ. 6.30 கோடிக்கு வாங்கி ஆந்திரா முழுக்க ரிலீஸ் செய்வதாக இருந்தார். இந் நிலையி ல் ஆந்திர சென்சாரில் தெலுங்கு தாண்டவ த்தை “சிவ தாண்டவம்” எனும் நேரடி தெ லுங்கு படமாக அங்கீகரிக்க மறுத்து டப்பி ங் படம் என சான்றிதழ் வழங்கப் பட்டிருக் கிறது. ஆனால் யுடிவி “சிவதாண்டவம்” நே ரடி தெலுங்கு படம். தமிழ், தெலுங்கு ஆகி ய இரு மொழிகளிலும் பைலாங்கு வேஜில் எடுக்கப்பட்ட படம் என்று பிலிம் சேம்பர் கல்யாணிடம் விற்பனை செய்திருக்கிறது. ஆனால் ஆந்திர தணிக்கை சான்றிதழ் சிவதாண்டவத்தை டப்பிங் படம் என்றே அங்கீகரித்திருப்பதால் ஆறு கோடியே முப்பது லட்சத்தி ற்கு படத்தை வாங்கிய கல்யாணுக்கு வரி, சதவிகித வித்தியாசங்க ளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. நஷ்டத்திற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்ப தால் யுடிவி.யுடன் பேச்சுவார்த்தை யில் இறங்கி இருக்கிறார். இரு தர ப்பிலும் இன்னமும் சுமூக உடன் பாடு ஏற்படாதது ஆந்திராவில் சிவ தாண்டவம் நாளை வெளிவருவதி ல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிரு ப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
ஆந்திராவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு 8 சதவீதம் மட்டு மே கேளிக்கை வரி என்பதும், டப்பிங் படங்களுக்கு 24 சதவீ தம் கேளிக்கை வரி அரசு விதிக் கும் என்பதும், “சிவதாண்டவம்” படத்தை நேரடி தெலுங்கு படம் எனச் சொல்லி யு.டி.வி., பிலிம் சேம்பர் கல்யாணிடம் பிஸின ஸ் செய்திருப்பதும், சிவதாண்ட வத்திற்கு டப்பிங் சர்டிபிகேட் கிடைத்திருப்பதும்தான் பிரச்னைகளுக்கு காரணம் என தெரியவந்து ள்ளது.
எது எப்படியோ, தமிழில் தப்பித்த “தாண்டவம்”, தெலுங்கில் ரிலீஸ் சிக்கலில் இருப்பதும் மட்டும் நிதர்சனம்! – dinamalar
ஆக மொத்தத்துல தாண்டவம் தப்பாட்டம்னு சொல்றீங்க…