Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

 

துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை) 

பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களு க்கும் பதில் தருகிறார்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு? – இரா.ஸ்ரீதர், திருப்ப த்தூர்.

”பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக் குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக் கான காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப் பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக, உடனடியா க பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தத்கல் முறை யில் விண்ணப்பிக்கலாம். இதில் உடனே பாஸ் போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.”
எனது மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட் சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ள து. நான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தபோது ஒரு நாள் வித்தியாச ம் உள்ளதால் தர மறுத்துவிட்டார் கள். பாஸ்போர்ட் பெற நான் என் ன செய்யவேண்டும்? – ராஜேந்தி ரன், கோயம்புத்தூர். 
”முதலில் கோயம்புத்தூர் மாநக ராட்சியில் சரியான பிறப்பு சான்றி தழை பெறவேண்டும். அந்த சரி யான பிறப்பு சான்றிதழைக் கொ ண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர் ட்க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.”
”எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கி டைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான் று வேண்டும் என்று கேட்கிறா ர்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலை யில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர் ட்க்கு விண்ணப்பிக்கலாம்?   –  இரா.சுதாகரன், கோயம்புத்தூ ர்.
”எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.”
எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வ குமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? – செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.
”நீங்கள் கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவ  ணத்தில் தவறு இருந்தால் சரி யான ஆவணத்துடன் மீண்டும் கட்டண ம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.”
எனது தங்கை பஞ்சாயத்து மூல ம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பா வின் பெயர் உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பதி ல் ஏதாவது சிக்கல் வருமா? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
”தங்களின் தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர் கொடுத்த அப்பாவின் பெயருள் ள சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக் கலாம். பாஸ்போர்ட்டில் ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான் இடம்பெறும்.”
எனது மகள் திருச்சியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக் கு புதுச்சேரியில் நிரந்தர முக வரி உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங் கினால் முகவரி மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரி யில் வாங் குவது என்றுகூறவும்?- கே.உஷா கிருஷ் ணமூர்த்தி, புதுச்சேரி.
”ஒருவர் தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறி ப்பிட்டுதான் பாஸ்போர்ட்க்கு விண்ண ப்பிக்க வேண்டும். அந்த வகையில் திரு ச்சி கல்லூரி முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு முடிந்தவுடன் நிரந்தர முகவரிக் கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை மாற்றிக்கொ ள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.”
இது விதை2விருட்சம் பதிவு அல்ல‍
-.-
இந்த இடுகையை கீழ்க்காணும் பொத்தான்களில் ஒன்றை அழுத்தி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

 

3 Comments

  • Anonymous

    பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தட்கல் முறை மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ. 2,500 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Anonymous

    நான் 10வகுப்பு ப்பெயில் என்னுடைய பாஸ்போர்ட் Ecnr க மாற்றுவது எப்படி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: